கள்ளக்காதலியின் மகனை துடிதுடிக்க அடித்து கொன்ற கள்ளக்காதலன் கைது…..!

criam 1 - 2026

சங்கரன்கோவிலில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதியாபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் சபரி, மகேஸ்வரி தம்பதியினா் . இவர்களுடைய மகன் குட்டிராஜ் (வயது 4). சபரி, மகேஸ்வரிக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை மகள் மகேஸ்வரி உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

அப்போது கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்த கருப்பையா மகன் கருப்பசாமி என்பவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மகேஸ்வர்க்கும் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. . கருப்பசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த மகேஸ்வரியின் தாயாரையும் கருப்பசாமி உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இதனால் மகேஸ்வரி, கருப்பசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி, கள்ளக்காதலி மகேஸ்வரியை பார்ப்பதற்காக அவரத வீட்டுக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் மகேஸ்வரி பக்கத்தில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கிவர சென்று விட்டதால் சிறுவன் குட்டிராஜ் மட்டும் அங்கு தனியாக இருந்துள்ளான். .

dead bady 1 - 2026இந்நிலையில் மகேஸ்வரி கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது குட்டிராஜ் வீட்டில் இறந்து கிடந்தான். இது குறித்து கருப்பசாமியிடம் மகேஸ்வரி கேட்டதற்கு குட்டிராஜ் படியில் தவறி விழுந்து சிறுவன் இறந்ததாக மகேஸ்வரியிடம் கருப்பசாமி கூறி உள்ளார். .

இதனையடுத்து சிறுவன் குட்டிராஜின் உடலை யாருக்கும் தெரியாமல் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறுவன் குட்டிராஜின் சாவில் மர்மம் இருப்பதாக சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் தங்கப்பதுமை, சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ALSO READ:  மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

கருப்பசாமிக்கு விபரீதமான நோய் உள்ளதாகவும், அந்த நோயின் தாக்கம் அதிகமாகும் நேரத்தில் கோபம் அதிகமாகி என்ன செய்கிறோம் என தெரியாமல் அவரது நடவடிக்கைகள் மாறும் என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்ற கருப்பசாமி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை விபரீத நோயால் அடித்ததாகவும், எட்டி உதைத்ததாகவும் தெரிகிறது.

இதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர் அவனது உடலை யாருக்கும் தெரியாமல் எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தாயின் கள்ளக்காதலனால் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை, சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories