அறநிலையத் துறை கல்லூரிகள்; அழிவுப் பாதையில் உயர் கல்வி!

Published:

education gets a virtual up ab778d5480 - 2026
education gets a virtual up ab778d5480

புதிய அரசுக் கல்லூரிகளை உயர்கல்வித் துறைத் தொடங்கலாமே!

தமிழகத்தின் மாநில அரசின் பல்கலைக் கழகங்கள் தொடங்கிய 41 உறுப்புக் கல்லூரிகளை இப்போது அரசுக்கல்லூரிகளாக மாற்றி அரசு ஆணை பிறப்பித்து
உள்ளது. இவ்வாறு மாற்றியது பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியே காரணமாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 அரசுக்கல்லூரிகள் தொடங்க அறிவிப்புச் செய்து நான்கு கல்லூரிகள் முதல் கட்டமாகத் தொடங்கிச் செயல்பட்டு வருகிறது. கோயில் நிலத்திலும் வருமானத்திலும் இக்கல்லூரிகள் செயல்படும் என்று அறிவித்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியப்படாது.


இவ்வாறு செயல்படுத்தினால் எதிர்காலத்தில் கோயிலுக்கும்,கல்லூரிக்கும் நிதி நெருக்கடிகள் வரும். கோயில் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

அரசுக்கல்லூரிகளை உயர்கல்வித்துறை தொடங்கினால் கண்காணிப்பும், வளர்ச்சியும், நிதி ஒதுக்கீடும் செய்ய முடியும். இது குறித்துக் கல்வியாளர் கருத்துரை கேட்டுக் கொள்கை முடிவு எடுத்து உயர்கல்வித்துறை செயல்பட வேண்டும்.

  • பேராசிரியர் முனைவர் சுபாஷ் சந்திர போஸ் (பணி ஓய்வு)
ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img