பிளஸ் 2 தேர்வு வேதியியல் வினாத்தாளில் பிழையான 2 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு

Published:

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் ஒரு மதிப்பெண் பகுதியில் 30 மார்க் முழுதாக எடுக்க முடியாமல் போய் விட்டதாகக் கூறினர். வினா எண் 10, 22 ஆகிய இரண்டிலும் பிழைகள் இருந்ததால் மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அந்த வினாக்களுக்கு சரியான விடை எது என்பதைத் தேர்வு செய்வதில் குழப்பம் அடைந்தனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் அந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகளை எழுதத் தெரியாமல் திணறினர். சிலர் முயற்சி செய்தனர். பலர் அதற்கு கொடுக்கப்பட்ட 4 விடைகளில் ஏதாவது ஒன்றை எழுதி வைத்து வந்தனர். இதனால் வேதியியல் தேர்வில் 2 மதிப்பெண் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மாணவர்கள் கூறினர். இது குறித்து துறை அதிகாரிகள் மற்றும் வினாத்தாள் தயாரித்த மூத்த ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில், தவறாக மற்றும் பிழையாகக் கேட்கப்பட்ட இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தவறாகக் கேட்கப்பட்ட 10, 22 ஆகிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எந்த விடை எழுதி இருந்தாலும் மதிப்பெண் கொடுக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img