இங்கிதம் பழகுவோம்(20) -ஆண் தேவதை!

20 - 2026

இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும்.

என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது.

பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக ஓடினாள் என் காருக்கு முன் நின்றுகொண்டிருந்த நிறுவன பஸ்ஸை நோக்கி… ‘வரேம்பா…’ என்ற வார்த்தையை காற்றில் பறக்க விட்டபடி…

பைக்கை ஓட்டி வந்தவரை அப்போதுதான் கவனித்தேன். வயதான தோற்றம். மெலிந்த தேகம். வெள்ளை முடி. முழுக்கை சட்டை, வேட்டி அணிந்திருந்தார். 

மகள் பஸ்ஸுக்குள் ஏறிவிட்டாளா என்ற கவலையில் பைக்கை மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்த்தியபடி, தலையை எட்டி எட்டி முன்னோக்கிப் பார்த்தபடி…. எனக்கோ என் கார் மீது இடித்து விடுவாரோ என்ற பயம்… ஆனாலும் அந்தக் காட்சியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

சிக்னல் கிடைக்க அந்த நிறுவன பஸ் கிளம்பியது… அப்பா பஸ் வேகம் எடுக்கும் வரை தன் பைக்கை மெதுவாக ஓட்டினார். மீண்டும் திரும்பி மகள் ஏற முடியாமல் கீழேயே நின்று கொண்டிருக்கிறாளா என ரோட்டை வேறு பார்த்து உறுதி செய்துகொண்டார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

நான் நேராக காரை ஓட்ட, அவர் யு-ட்ரன் செய்து விட்டார்.

குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் நிறுவன பஸ்ஸை அந்த ஸ்டாப்பில் தவற விட்டதால் அப்பா அவசர கதியில் மகளை பஸ்ஸைத் துரத்தி வந்து ஏற்றிவிட்டுச் சென்ற அந்தக் காட்சி ‘கவிதை’…

இது இன்றைய பொழுதை இனிமையாக்கியது.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் ஒருவர் எந்தப் பணியில் இருந்தாலும் அவர் அதில் ஜெயிக்க அவர் மட்டுமே காரணமில்லை. இதுபோல எத்தனை ஆண் தேவைதைகளும், பெண் காவல் தெய்வங்களும் வீட்டில் முட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது.

பட்டம், பதவி, பணி, பணம் இவற்றுக்கு நேரம் ஒதுக்கும் அதே சமயம் குடும்பத்தையும் நேசிப்போம். நேரம் ஒதுக்குவோம்.

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories