December 5, 2025, 3:45 PM
27.9 C
Chennai

இங்கிதம் பழகுவோம்(27) -1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம்!

27. ingitham - 2025

1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை,  மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை  எல்லா விதமான நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் இறங்கினோம்.  

அப்போதெல்லாம் வீடுகளுக்கு வரும் மருத்துவர்களைப் பார்த்து பயப்படும் குழந்தைகளைப் போலவே கம்ப்யூட்டர் என்ற வார்த்தையுடன் பேச ஆரம்பிக்கும் என்னைப் பார்த்தும் பயந்தார்கள்.

ஏனெனில் அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர்  என்பது படித்து பட்டம் பெற்றவர்களும், ஆங்கிலம் அறிந்தவர்களும், இளைஞர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய  ஒன்று என்ற பரவலான கண்ணோட்டம் இருந்து வந்தது.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டருடன் மக்கள் நெருக்கமாக ஒரே ஒரு வழிதான், அது மொழியின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்துகொண்டோம்.

தமிழில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வைக்கும் நுட்பத்தை ஆராய்ந்தோம். தமிழ் ஃபாண்ட்டுகளை உருவாக்கி  சாஃப்ட்வேர்கள் தயாரித்து அவற்றின் மூலம் நிறுவனங்களை அணுகி வெற்றி பெற்றோம்.

தமிழிலேயே கம்ப்யூட்டரை பயன்படுத்த தமிழ் ஃபாண்டுகள், தமிழிலேயே சாஃப்ட்வேர்கள் என  தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து வெற்றி பெற்றோம்.

1992- 2000 வரை தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு காம்கேருக்கு உண்டு.  அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் இன்றுவரை அந்த பணியை தொடர்ச்சியாகச் செய்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2000-2010 வரை தொழில்நுட்பம் வளர வளர நம் மக்களும் அதனுடன் கூடவே வளர்ந்தார்கள்.

2010-2019 வரை தொழில்நுட்பம் நம் மக்களை ‘தரதர’ வென இழுத்துச் செல்லாத குறையாக இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

1992-வில் ஆரம்பித்த எங்கள் காம்கேர் மூலமான என் பயணம் இன்றுவரை தொடர்கிறது கால மாற்றத்துக்கு ஏற்ப வெவ்வேறு கோணங்களில்…

காம்கேர் மூலம் நான் தயாரிக்கின்ற சாஃப்ட்வேர்கள், அனிமேஷன் படைப்புகள், ஆப்கள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்து, பேச்சு என பல வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் என் ஒட்டுமொத்த மகிழ்ச்சியே அடங்கியுள்ளது.

இதோ இன்று…

‘பிளாக் இனி வேலை செய்யாது’ என்ற புரளி ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில்….

அது உண்மை இல்லை என்பதற்கு ஒரு கட்டுரை தயாரித்து என் வெப்சைட்டில் பதிவாக்கினேன்.

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு பலர் அவர்கள் பிளாக் முகவரியை எனக்கு அனுப்பி எப்படி இருக்கிறது என பார்த்து என் கருத்தைச் சொல்லச் சொல்லி கேட்டிருந்தனர்.

முதன்முதலில் என் பதிவுக்கு கமெண்ட் செய்து தன் பிளாக் முகவரியை அனுப்பியவர் திரு.வெங்கட் ரமணி அவர்கள். அவரது வயது 80+ என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து என் பார்வைக்கு அனுப்பிய பிளாகுகளை பராமரித்து வருபவர்கள் அனைவருமே 70 வயதைக் கடந்தவர்கள்.

தொழில்நுட்பத்தை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று 1992-ல் நான் கண்ட கனவு மெய்ப்பட்டுள்ளதற்கு இதுஒன்றே போதாதா?

இப்போது சொல்லுங்கள் தொழில்நுட்பம் நம் மக்களை இழுத்துச் செல்கிறதா அல்லது நாம் தொழில்நுட்பத்தின் பின் செல்கிறோமா?

(பிளாக் இனி கிடையாது என்ற புரளிக்கான பதில் தேவைப்படுபவர்கள் இந்த லிங்கில் http://compcarebhuvaneswari.com/?p=3813)

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories