இங்கிதம் பழகுவோம்(27) -1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம்!

27. ingitham - 2026

1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை,  மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை  எல்லா விதமான நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் இறங்கினோம்.  

அப்போதெல்லாம் வீடுகளுக்கு வரும் மருத்துவர்களைப் பார்த்து பயப்படும் குழந்தைகளைப் போலவே கம்ப்யூட்டர் என்ற வார்த்தையுடன் பேச ஆரம்பிக்கும் என்னைப் பார்த்தும் பயந்தார்கள்.

ஏனெனில் அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர்  என்பது படித்து பட்டம் பெற்றவர்களும், ஆங்கிலம் அறிந்தவர்களும், இளைஞர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய  ஒன்று என்ற பரவலான கண்ணோட்டம் இருந்து வந்தது.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டருடன் மக்கள் நெருக்கமாக ஒரே ஒரு வழிதான், அது மொழியின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்துகொண்டோம்.

தமிழில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வைக்கும் நுட்பத்தை ஆராய்ந்தோம். தமிழ் ஃபாண்ட்டுகளை உருவாக்கி  சாஃப்ட்வேர்கள் தயாரித்து அவற்றின் மூலம் நிறுவனங்களை அணுகி வெற்றி பெற்றோம்.

தமிழிலேயே கம்ப்யூட்டரை பயன்படுத்த தமிழ் ஃபாண்டுகள், தமிழிலேயே சாஃப்ட்வேர்கள் என  தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து வெற்றி பெற்றோம்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

1992- 2000 வரை தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு காம்கேருக்கு உண்டு.  அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் இன்றுவரை அந்த பணியை தொடர்ச்சியாகச் செய்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2000-2010 வரை தொழில்நுட்பம் வளர வளர நம் மக்களும் அதனுடன் கூடவே வளர்ந்தார்கள்.

2010-2019 வரை தொழில்நுட்பம் நம் மக்களை ‘தரதர’ வென இழுத்துச் செல்லாத குறையாக இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

1992-வில் ஆரம்பித்த எங்கள் காம்கேர் மூலமான என் பயணம் இன்றுவரை தொடர்கிறது கால மாற்றத்துக்கு ஏற்ப வெவ்வேறு கோணங்களில்…

காம்கேர் மூலம் நான் தயாரிக்கின்ற சாஃப்ட்வேர்கள், அனிமேஷன் படைப்புகள், ஆப்கள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்து, பேச்சு என பல வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் என் ஒட்டுமொத்த மகிழ்ச்சியே அடங்கியுள்ளது.

இதோ இன்று…

‘பிளாக் இனி வேலை செய்யாது’ என்ற புரளி ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில்….

அது உண்மை இல்லை என்பதற்கு ஒரு கட்டுரை தயாரித்து என் வெப்சைட்டில் பதிவாக்கினேன்.

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு பலர் அவர்கள் பிளாக் முகவரியை எனக்கு அனுப்பி எப்படி இருக்கிறது என பார்த்து என் கருத்தைச் சொல்லச் சொல்லி கேட்டிருந்தனர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

முதன்முதலில் என் பதிவுக்கு கமெண்ட் செய்து தன் பிளாக் முகவரியை அனுப்பியவர் திரு.வெங்கட் ரமணி அவர்கள். அவரது வயது 80+ என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து என் பார்வைக்கு அனுப்பிய பிளாகுகளை பராமரித்து வருபவர்கள் அனைவருமே 70 வயதைக் கடந்தவர்கள்.

தொழில்நுட்பத்தை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று 1992-ல் நான் கண்ட கனவு மெய்ப்பட்டுள்ளதற்கு இதுஒன்றே போதாதா?

இப்போது சொல்லுங்கள் தொழில்நுட்பம் நம் மக்களை இழுத்துச் செல்கிறதா அல்லது நாம் தொழில்நுட்பத்தின் பின் செல்கிறோமா?

(பிளாக் இனி கிடையாது என்ற புரளிக்கான பதில் தேவைப்படுபவர்கள் இந்த லிங்கில் http://compcarebhuvaneswari.com/?p=3813)

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories