தன்னந்தனியா சைக்கிளில் நாடு சுற்றும் 24 வயசு இளம்பெண்; காரணம் என்ன தெரியுமா?!

asha malmia cycle tour - 2026

பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில், தன்னந்தனியாக தாம் நாடு முழுதும் சைக்கிள் பயணம் செய்து வருவதாகக் கூறியுள்ளார் 24 வயது இளம்பெண் ஆஷா மால்மியா.  

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா என்கிற 24 வயது தேசிய மலையேற்ற வீராங்கணை,  இந்தியா முழுவதும் தனி ஒரு பெண்ணாக, இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்த சைக்கிள் பயணம் செய்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் அவரது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசம் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தன்று , தனது பயணத்தைத் தொடங்கிய ஆஷா மால்மியா, குஜராத் மகாராஷ்டிரா ,கோவா, கர்நாடகா, கேரளா, உட்பட ஏழு மாநிலங்களை தனி ஒரு பெண்ணாக யாருடைய துணையும் இன்றி கடந்து, இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தடைந்தார்.

இவரது உயரிய எண்ணத்தை அறிந்து அவரைப் பாராட்டும் விதமாகவும் ஆதரிக்கும் நோக்கிலும், ராஜபாளையம் வருகை தந்த ஆஷா  மால்மியாவை, ராஜபாளையம் டி.எஸ்.பி. ப்ரீத்தி வரவேற்று உபசரித்து தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார். 

தான் கடந்து வந்த பாதைகள் குறித்து ஆஷா மால்மியா கூறியதாவது:

எனது நாடு பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்தவே இந்த அரிய முயற்சி, நான், கடந்து வந்த பாதைகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள்  காவல் துறையினர்,

வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் நன்கு வரவேற்று உபசரித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது இந்தியா பாதுகாப்பான நாடு தான் என்பதை உறுதி செய்கிறது. எனது பயணத்தின் இறுதியில், எனது தாய்நாட்டைப் பற்றி தவறாக எண்ணியவர்களுக்கு என் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும் என உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

இவரை வரவேற்று ஆதரவுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த டிஎஸ்பி ப்ரீத்தி வாழ்த்துகள் கூறி வழியனுப்பி வைத்தார். மதுரை வழியாக தமிழகத்தை கடந்து ஓசூர் கர்நாடகா வழியாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆஷாமால்மியா தனது பயணத்தை தொடர்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories