December 5, 2025, 2:55 PM
26.9 C
Chennai

இன்று… முக்கியத் தீர்ப்புகள்! பரபர எதிர்பார்ப்பில் உச்ச நீதிமன்றம்!

sabarimalai supremecourt - 2025

சபரிமலை மற்றும் ரபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதும் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘காவலாளி திருடன்’ என மோடியை விமர்சித்த ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 – 50 வயது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ‘அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட 48 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

அடுத்து, இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பு வழங்கியது இதனை எதிர்த்தும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அண்மை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சௌக்கிதார் சோர் ஹை என, காவல்காரரே திருடன்’ என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் கூறியது குறித்து, அவர் மீது பாஜக எம்.பி., மீனாட்சி லோகி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீது காலை 10.30 க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனை கேரளம் மட்டுமின்றி, தென்மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories