அடிச்சவன் முஸ்லிமா இருந்தா… அடிவாங்கின போலீசை இடம் மாத்து! சூப்பர் தமிழக போலீஸ்!

 

4 muslims attacked policeman.jpg.pagespeed.ic . ckWZNmIJC - 2026அடித்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் அடிவாங்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் ; ஏன் இஸ்லாமியர்களிடம் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வானேன்… அவர்களிடம் அடி வாங்குவானேன்… காக்கிச் சட்டை மானத்தை இழக்க வைப்பானேன்…??? என்ற ரீதியில்  அருமையான கொள்கைக்கு வந்திருக்கிறது தமிழக காவல்துறை!

சென்னை வியாசர்பாடியில் போலீஸ்காரரை தாக்கிய ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய சென்னை காவல் துறை, அதற்கு முந்தைய நாள் 4 முஸ்லிம் குண்டர்களிடம் அடி வாங்கிய போலீஸ்காரருக்கு இடமாறுதலை பரிசாக வழங்கி இருக்கிறது.

இதனால், அவர் அடி வாங்கும் வீடியோ இப்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கார்த்திகேயன், கடந்த 13-ந்தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த முகம்மது அக்பர், முகமது நவ்ஷத் ஆகியோர் அந்த பகுதியில் திருநங்கைகளிடம் பாலியல் தொழில் தொடர்பாக தகராறு செய்து கொண்டிருந்தனர்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

அப்போது போலீஸ்காரர் கார்த்திகேயன் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியிருக்கிறார்.

மது போதையில் இருந்த அந்த குண்டர்கள் 4 பேரும் கார்த்திகேயனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். மேலும், போலீஸ்காரரிடம் இருந்த வாக்கி டாக்கியையும் பறித்து உடைத்து விட்டனர்.

இதனால் பயந்து போன கார்த்திகேயன், சக போலீஸ்காரர் குழந்தைவேலுவை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து, மற்ற போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த நேரத்தில் குண்டர்கள் 4 பேரும் கார்த்திகேயனை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தனர். அந்த நேரத்தில் போலீசார் அதிக அளவில் அங்கே வந்ததால் நிலைமை விபரீதமாகி விடும் என்று நினைத்து அந்த குண்டர்கள் நான்கு பேரும் அவர்கள் வந்த காரில் தப்பி ஓடினர்.

அப்போது போலீஸ்காரர் குழந்தைவேலுவையும் மோதிவிட்டு அந்த கார் TN 04 AU 5920 சென்றது.

பின்னர் ஒரு வழியாக போலீஸ் படை விரைந்து சென்று மடக்கி, 4 பேரையும் கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பி வைத்தனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, அடி வாங்கிய போலீஸ்காரர் கார்த்திகேயனை ஜே.சி டீமிற்கு இடமாற்றம் செய்து அனுப்பினார் உதவி ஆணையர் கோவிந்தராஜ். அதேபோல், 4 பேரையும் ரிமாண்டிற்கு அனுப்பிய 4 போலீஸாரையும் உதவி ஆணையர் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். (அதாவது, போலீஸாரை தாக்கிய இளைஞர்கள் 4 பேரையும், இவர்கள் அடித்து துன்புறுத்தினார்களாம்).

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

மேலதிகாரிகளின் இந்தச் செயல் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், ஜே.சி டீமிற்கு மாற்றப்பட்ட கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார்.

உதவி ஆணையரின் விசாரணைக்கு ஆஜரான மற்ற 4 போலீஸாரும் விடுப்பில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காக போலீஸ்காரர் கார்த்திகேயன் அடி வாங்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோவை அனேகமாக உடனிருந்த இன்னொரு போலீஸ்காரர் எடுத்திருக்க வேண்டும் காரணம் நீ அடி வாங்கு என்று அடிக்கட்டும் அடிக்கட்டும் என்று ஒரு குரல் கேட்கிறது மேலும் இந்த நான்கு பேரும் அந்த கார் வீடியோவில் எடுக்கப்படும்போது 4 பேரில் ஒருவர் வேகமாக அடித்து கேமராவில் பதிவானதை நிறுத்துகிறார்

Screenshot 20190621 220221 Chrome - 2026

 

இந்த வீடியோ பதிவில் காரின் பதிவு எண் தெரிகிறது அது முகம்மது நவ்ஷாத் அலி என்பவருக்கு சொந்தமானது மேலும் இந்த காரின் இன்ஷூரன்ஸ் ஜூன் மாதம் மூன்றாம் தேதி காலாவதியாகிவிட்டது இந்த சம்பவம் நடந்தது ஜூன் மாதம் 14 ஆம் தேதி.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த நிலையில் இஸ்லாமிய நபர்கள் 4 பேரிடம் அடிவாங்கிய போலீஸ் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி போலீசாருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது தமிழக போலீசின் தரம் இவ்வளவு தூரம் தாழ்ந்து இருக்கிறதே என்று பலரும் வருத்தத்துடனும் கோபத்துடனும் பகிர்ந்து வருகிறார்கள்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories