தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்

samavedam 1 - 2026

தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.

தமிழாக்கம் – ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்.

“ஜன கண மன அதி நாயக ஜயஹே!”
நம் தேசீய கீதத்தின் இந்த முதல் வரியின் விளக்கம்:-
தோற்றம் கொண்டவை அனைத்தும் ஜனங்கள் அதாவது ஜனனம் எடுத்தவை. முதலில் தோன்றியவை
பஞ்ச பூதங்கள். அவற்றிலிருந்து மீதியனைத்தும் தோன்றின. அவ்விதம் பார்த்தால்
கிரகங்கள், நட்சத்திரங்கள், தேவதைகள் – இவையனைத்தும் ஜனங்களே. பிறந்தவை
அனைத்தும் ஜனங்களே அல்லவா? பிறவி என்ற தர்மம் கொண்டவை அனைத்தும் ‘ஜனம்’.

“சர்வே ஜீவா: கண்யா: கணா: தேஷாம் பரி கணேஷ:” என்பது விளக்கம். ஜீவர்கள்
அனைவரும் கணங்களே. கணக்கீட்டிற்கு உட்பட்டவர்கள். தேவர்கள் எவ்வளவு பேர்?
தேவர்களுள் ஒரு பிரிவினரான வசுக்கள் 8 பேர். ருத்திரர்கள் 11 பேர்.
ஆதித்யர்கள் 12 பேர். கணக்கு உள்ளதல்லவா? கணக்கிட முடிவதால் இவர்களனைவரும்
கணங்களே! கிரகங்கள் எத்தனை? 9. இன்னும் கிரகங்கள் இருக்கின்றனவாம்.
மொத்தத்தில் கிரகங்களுக்கும் எண்ணிக்கை இருப்பதால் அவையும் கணங்களே.

நட்சத்திரங்கள்? 27. அவற்றின் பிடியில் நாம் உள்ளோம். எனவே இவையனைத்தும் ஜனம்,
கணம் என்பவற்றின் கீழ் வருகின்றன.

எனவே, “ஜன கண மன அதி நாயகன்” – கணபதியே! வேறல்ல.

இதை எடுத்துக் கூறினால் தேசீய கீதத்தில் கூட ஹிந்து மதக் கொள்கை இருப்பதாகக்
கூறி எடுத்துவிடச் சொல்வார்களோ, என்னவோ!

பாரத தேசத்தில் ஒவ்வொன்றும் ஹிந்துயிஸமே! ஹிந்து மதக் கொள்கையோடு கூடியதே.
அதில் மறுப்பதற்கோ சந்தேகத்திற்கோ இடமில்லை. பாரதீயம் ஹிந்துயிஸமே!

எனவே அந்த கணபதியிடம் நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். அது என்ன?

“பாரத பாக்கிய விதாதா!” (விதாதா என்றால் படைப்பவன்).
“ஸ்வாமி! பாரதத்தின் பாக்கியத்தை படைப்பவன் நீயே!”

அதனால் தான் விநாயக சதுர்த்தி வந்தால் போதும். எங்கு பார்த்தாலும் கணபதி
வழிபாடு வியாபித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அச்சமயத்தில் ஹிந்து
மதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூட மெளனமாக கணபதிக்கு நமஸ்காரம்
தெரிவிக்க வேண்டியது தான். வேறு வழியில்லை.

அது எங்கிருந்து எங்கு வரை பரவியுள்ளது?

“பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கள வங்கா!
விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா!”

இவை அனைத்திலும்
“தவ சுப நாமே ஜாஹே! தவ சுப ஆசிஸ மாஹே!”
“ஸ்வாமி! உன் நாமத்தை இந்த தேசம் மொத்தம் எதிரொலிக்கிறது. உன் சுப ஆசிகளை
விழைகிறது”.

அது மட்டுமல்ல. எங்கு பார்த்தாலும் அதே முழக்கம். வீட்டிற்கு உள்ளேயும்
வெளியேயும் கணபதி நவராத்திரிகள், அவர் மேல் கீதங்கள், ஹோமங்கள், பஜனைகள்.
எங்கு பார்த்தாலும் கணேச தத்துவத்தை போதிப்பவர்கள் – என்று இவ்வாறு
பார்க்கையில்,

“காஹே தவ ஜய காதா!”
எதனால் இவ்வாறு நிகழ்கிறது என்று கவனித்தால், ஜன கண நாயகன் ஆதலால்.

“ஜன கண மங்கள தாயக!”
அப்படிப்பட்ட ஸ்வாமிக்கு

“ஜயஹே! ஜயஜெ! ஜயஹே!
ஜய ஜய ஜய ஜயஹே!”

நம் தேசீய கீதத்தில் இத்தனை அற்புத பொருள் பொதிந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories