தினசரி ஒரு வேத வாக்கியம்: 28. இருப்பது பிரம்மமே!

Dhinasari வேத வாக்கியம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா  
தமிழில்: ராஜி ரகுநாதன்

“ப்ரஹ்மை விஸ்மிதம் வரிஷ்டம்” – முண்டகோபநிஷத்.

“விஸ்வமனைத்தும் சிறப்பான பிரம்மமே!”

விஸ்வமனைத்தையும் பிரம்ம  தத்துவமாக தரிசித்த பாரதிய வேதாந்த சாஸ்திரம் ஒரு உயர்ந்த உபதேசத்தை பிரபஞ்சத்திற்கு போதிக்கிறது.

அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் முதல் நாமம் விஸ்வம். விஸ்வமே விஷ்ணு ஸ்வரூபம் என்று குறிப்பிடுகிறது. 

இந்த உண்மையை அனுபவத்தில் அடைவதே ஞானம். இத்தகு ஞானமடைந்தவரே மகா பக்தர். அவரே முக்தர். அனைத்தையும் பரப்பிரம்மமாக தரிசிப்பதே ஏகத்துவ ஞானம். 

கிம் ஏகம் தைவதம் லோகே“என்று தர்மபுத்திரன் பீஷ்மரை  வினவியதற்கு, “ஏக தைவதம் பரப்பிரம்மமே” என்பது பீஷ்மரின் பதில். 

“சர்வம் கல்விதம் ப்ரஹ்ம – தஞ்ஜலானிதி சாந்த உபாசீத” என்று சாந்தோக்யோபனிஷத்  வாக்கியம் கூட இதே சத்தியத்தை விளக்குகிறது.

அலைகள் எல்லாம் ஒரே கடல் நீரின் சொரூபமே. அதேபோல் விஸ்வத்தில் தென்படும் அனைத்தும் பரப்பிரம்ம சொரூபமே. பரமாத்மாவிடம் ஜனித்து பரமாத்மாவிடம் லயமாகிறது ஜகத்.  

எல்லாம் பரமாத்மாவின் சொரூபம் என்பதால் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் எங்கே? கொடுமைகளுக்கும் கவலைகளுக்கும் வாய்ப்பு எங்கே?

“அஹமாத்மா குடாகேச! சர்வபூத ஸயஸ்தித:” -“அனைவரின் இதயத்திலும் உள்ள ஆத்மா நான்” என்ற பரமாத்மாவின் கீதைச் சொற்கள், “சர்வத்ர சமதர்சனம்” என்று சமத்துவத்தை எடுத்துரைக்கின்றன.

பிறவியெடுத்த உடல்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் சைதன்ய சொரூபமான ஆத்மாவில் பேதமில்லை. இதனை அறிந்தவர் “ஆத்மவத் சர்வபூதானி” – தன்னைப் போலவே அனைத்து உயிர்களையும் பார்க்க இயலும்.

ந ச சர்வஸ்யைகாத்மத்வே ராகாதயஸ்ஸம்பவந்தி… தஸ்மாச்சாந்தஉபாசீத… இதிஸ்ருதே:”என்று விஷ்ணு நாம பாஷ்யத்தில் ஆதிசங்கரர் கூறுகிறார்.

எல்லாம் தானே ஆகிய ஏகமான பரப்பிரமத்தை அறிந்தபின் விருப்பு வெறுப்புகள் ஏற்படாது. “தஸ்மாச்சாந்த உபாசீத” – ‘நானாக அமைதி அடைந்தவனாக உபாசிக்க வேண்டும்’ என்று வேதம் கூறுகிறது.

இதனைக் கொண்டு வேதாந்த ஞானம் அளிக்கும் அமைதியை புரிந்து கொள்ள முடியும். உலகளாவிய வேதாந்தம் ஏக தத்துவத்தை விளக்குகிறது.

“இதுவே பிரபஞ்சத்தின் எதிர்கால மதம்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றில் உள்ள ஆழம் இந்த ஆப்த வாக்கியத்தின் இதயமாக உள்ளது. 

எல்லாம் பிரம்ம மயம்  என்பதை அனுபவத்தில் பெறும் வரை இந்த கருத்தை பாவனையில் சிந்தித்து வரவேண்டும். அந்த சிந்தனை சகல உயிர்களிடத்தும் அமைதியையும் நன்மையையும் ஏற்படுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories