தினசரி ஒரு வேத வாக்கியம்: 28. இருப்பது பிரம்மமே!

Dhinasari வேத வாக்கியம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா  
தமிழில்: ராஜி ரகுநாதன்

“ப்ரஹ்மை விஸ்மிதம் வரிஷ்டம்” – முண்டகோபநிஷத்.

“விஸ்வமனைத்தும் சிறப்பான பிரம்மமே!”

விஸ்வமனைத்தையும் பிரம்ம  தத்துவமாக தரிசித்த பாரதிய வேதாந்த சாஸ்திரம் ஒரு உயர்ந்த உபதேசத்தை பிரபஞ்சத்திற்கு போதிக்கிறது.

அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் முதல் நாமம் விஸ்வம். விஸ்வமே விஷ்ணு ஸ்வரூபம் என்று குறிப்பிடுகிறது. 

இந்த உண்மையை அனுபவத்தில் அடைவதே ஞானம். இத்தகு ஞானமடைந்தவரே மகா பக்தர். அவரே முக்தர். அனைத்தையும் பரப்பிரம்மமாக தரிசிப்பதே ஏகத்துவ ஞானம். 

கிம் ஏகம் தைவதம் லோகே“என்று தர்மபுத்திரன் பீஷ்மரை  வினவியதற்கு, “ஏக தைவதம் பரப்பிரம்மமே” என்பது பீஷ்மரின் பதில். 

“சர்வம் கல்விதம் ப்ரஹ்ம – தஞ்ஜலானிதி சாந்த உபாசீத” என்று சாந்தோக்யோபனிஷத்  வாக்கியம் கூட இதே சத்தியத்தை விளக்குகிறது.

அலைகள் எல்லாம் ஒரே கடல் நீரின் சொரூபமே. அதேபோல் விஸ்வத்தில் தென்படும் அனைத்தும் பரப்பிரம்ம சொரூபமே. பரமாத்மாவிடம் ஜனித்து பரமாத்மாவிடம் லயமாகிறது ஜகத்.  

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

எல்லாம் பரமாத்மாவின் சொரூபம் என்பதால் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் எங்கே? கொடுமைகளுக்கும் கவலைகளுக்கும் வாய்ப்பு எங்கே?

“அஹமாத்மா குடாகேச! சர்வபூத ஸயஸ்தித:” -“அனைவரின் இதயத்திலும் உள்ள ஆத்மா நான்” என்ற பரமாத்மாவின் கீதைச் சொற்கள், “சர்வத்ர சமதர்சனம்” என்று சமத்துவத்தை எடுத்துரைக்கின்றன.

பிறவியெடுத்த உடல்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் சைதன்ய சொரூபமான ஆத்மாவில் பேதமில்லை. இதனை அறிந்தவர் “ஆத்மவத் சர்வபூதானி” – தன்னைப் போலவே அனைத்து உயிர்களையும் பார்க்க இயலும்.

ந ச சர்வஸ்யைகாத்மத்வே ராகாதயஸ்ஸம்பவந்தி… தஸ்மாச்சாந்தஉபாசீத… இதிஸ்ருதே:”என்று விஷ்ணு நாம பாஷ்யத்தில் ஆதிசங்கரர் கூறுகிறார்.

எல்லாம் தானே ஆகிய ஏகமான பரப்பிரமத்தை அறிந்தபின் விருப்பு வெறுப்புகள் ஏற்படாது. “தஸ்மாச்சாந்த உபாசீத” – ‘நானாக அமைதி அடைந்தவனாக உபாசிக்க வேண்டும்’ என்று வேதம் கூறுகிறது.

இதனைக் கொண்டு வேதாந்த ஞானம் அளிக்கும் அமைதியை புரிந்து கொள்ள முடியும். உலகளாவிய வேதாந்தம் ஏக தத்துவத்தை விளக்குகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

“இதுவே பிரபஞ்சத்தின் எதிர்கால மதம்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றில் உள்ள ஆழம் இந்த ஆப்த வாக்கியத்தின் இதயமாக உள்ளது. 

எல்லாம் பிரம்ம மயம்  என்பதை அனுபவத்தில் பெறும் வரை இந்த கருத்தை பாவனையில் சிந்தித்து வரவேண்டும். அந்த சிந்தனை சகல உயிர்களிடத்தும் அமைதியையும் நன்மையையும் ஏற்படுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories