அண்ணா என் உடைமைப் பொருள் (14) எனக்கும் அவள்தான் உனக்கும் அவள்தான்!

anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 14
எனக்கும் அவள்தான் உனக்கும் அவள்தான்
– வேதா டி. ஸ்ரீதரன் –

இந்தக் காலகட்டத்தில், எழுமலையைச் சேர்ந்த ஶ்ரீ இளங்கோவனும் நானும் வேறு சிலருடன் சேர்ந்து பள்ளிகளுக்கான பாடநூல்கள் தயாரித்து வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

பல்வேறு ஆலோசனைகள் முடிவடைந்த நிலையில், பதிப்பகத்துக்கு என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. எங்களுக்கு குருமகராஜ், சாரதா, ஸ்வாமிஜி ஆகிய மூன்று பெயர்கள் தோன்றின. இருந்தாலும், அண்ணாவிடம் கேட்போம். அவர் சொல்லும் பெயரையே வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அண்ணாவிடம் கேட்டால் அவர் சாரதா என்ற பெயரைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று நான் வேடிக்கையாகக் கூறினேன்.

பின்னர் அண்ணாவிடம் போய்க் கேட்டேன். அண்ணா சிரித்துக் கொண்டே, ‘‘நீ யோசிச்சிருப்பியே! அதைச் சொல்லு முதல்லே’’ என்றார். நாங்கள் யோசித்து வைத்திருந்த  மூன்று பெயர்களையும் சொன்னேன்.

உடனே அண்ணா, ‘‘சாரதையே வை. ஆசார்யாளுக்கும் அவ தான். சிருங்கேரிக்கும் அவ தான். காஞ்சிக்கும் அவ தான். நீ சொன்னியே குருமகராஜ் – அவருக்கும் அவ தான். எனக்கும் அவ தான். உனக்கும் அவ தான். பப்ளிகேஷனுக்கும் அவ பெயரே இருக்கட்டும்’’ என்றார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இதற்குச் சில நாட்கள் பின்னர், பதிப்பகத்துக்கு லோகோ தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை வந்தது. லோகோவில் கல்வியுடன் தொடர்புடைய ஏதாவது சம்ஸ்கிருத வாசகம் போட வேண்டும் என நான் விரும்பினேன். வித்யா ததாதி வினயம் என்ற வாசகம் வைக்கலாம் என்று தோன்றியது. ஆனால், எனக்கென்னவோ அது பிடிக்கவில்லை. அண்ணாவிடம் கேட்கலாம் என்று அவரிடம் போனேன்.

Ra Ganapathy1 - 2026

அண்ணா அப்போது சுவரைப் பார்த்தவாறு துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். நான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். என்ன விஷயம் என்று அண்ணா கேட்டார். ‘‘அண்ணா, பப்ளிகேஷன் லோகோவுக்கு ஏதாவது ஸான்ஸ்க்ரிட் கொடேஷன் வேணும்’’ என்றேன். தலையை மட்டும் திரும்பி என்னைப் பார்த்த அண்ணா, ‘‘வித்யா ததாதி வினயமே போடு’’ என்றார்.

வித்யா ததாதி வினயமே போடு என்று அண்ணா சொன்னது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் என்ன யோசித்திருந்தேன் என்பது தெரிந்தே தான் அவ்வாறு சொன்னாரோ என்ற கேள்வி எழுந்தது. எனது யூகம் சரியே என்பது போலப் பிற்காலத்தில் நிறைய சம்பவங்கள் உண்டு.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories