காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 49): எதிர்ப்பில் கிளைத்த துண்டாடல்!

india pak - 2026

‘அக்ரனி ‘ ( முன்னோடி ) எனப் பெயரிடப்பட்ட அந்த மராத்தி தினசரி, 1944 ஆம் ஆண்டு மார்ச் 28ந் தேதி,யுகாதியன்று வெளிவரத் துவங்கியது. அதன் முதற் பக்கத்தில் சாவர்க்கரின் படமும்,சமஸ்கிருதத்தில் பத்திரிகையின் முக்கிய நோக்கத்தை குறிக்கும் வாசகமும் இடம் பெற்றிருந்தது.

‘ மக்கள் நலன்,வெறும் புகழ் அல்ல ‘ என்பதே அந்த வாசகத்தின் பொருள். நாதுராம் கோட்ஸே பத்திரிகையின் ஆசிரியர், நாராயண் ஆப்தே அதன் மேலாளர்.

ஆப்தே இன்னும் ராணுவப் பணியில் இருந்தார், ராணுவச் சீருடையும் அணிந்துக் கொண்டிருந்தார். தொடக்கம் முதலே அந்த தினசரி பல பிரச்சனைகளை சந்தித்தது.

போர்க் காலம் ஆகையால், பொருட்களின் தட்டுப்பாடு, அச்சடிக்கத் தேவைப்பட்ட காகிதத்திற்கு கட்டுப்பாடு, பத்திரிகை தணிக்கை, சி.ஐ.டி. கண்காணிப்பு, அனைத்திற்கும் மேலாக பணத் தட்டுப்பாடு.

ஆனால் ஆசிரியரும், மேலாளரும், பக்தி சிரத்தையுடன் கடுமையாக உழைத்தனர். கடினச் சூழ்நிலைகள், இருவரையும் நெருக்கமாகக் கொண்டு வந்தது என்று சொல்லலாம். இருவரும் பரஸ்பரம்,தங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொண்டு செயல்பட்டனர்.நண்பர்களிடம் கடன் வாங்கினார்கள்,வட்டிக்குக் கடன் வாங்கினார்கள்…

பத்திரிகை தொடர்ந்து வெளி வந்துக் கொண்டிருந்தது..! தொடக்கத்தில், இந்திய தேசிய காங்கிரஸுக்கும், ஹிந்து மகா சபாவிற்கும் உணர்வுகளில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.

இருவரும் சுவராஜ்யம் வேண்டும் என்றே எண்ணினர்,இருவரும் நாடு பிளவுப்படக்கூடாது என்றே எண்ணினர். ஓரே வித்தியாசம், நாடு பிளவு படாமல் இருப்பதற்காக, முஸ்லீம்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிப்பதற்கு காங்கிரஸ் தயாராக இருந்தது.

ஆனால்.. ஹிந்து மகா சபா இத்தகையச் சலுகைகள் அளிப்பதை கடுமையாக எதிர்த்தது.

காந்தி மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார், ‘’ என்னை துண்டாடி விட்டு நாட்டை துண்டாடுங்கள் ‘’. நேருவும், பிற காங்கிரஸ் தலைவர்களும் கூட இதே உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்த நோக்கில் உறுதியாக நில்லாமல், முஸ்லீம் லீக்கும், அதன் தலைவர் ஜின்னாவும் தந்த அழுத்தத்திற்கு அடி பணிந்தனர்.

ஆனால் சாவர்க்கரும் அவருடைய தொண்டர்களும், இறுதி வரை, பாரதம் துண்டாடப்படுவதை உறுதியாக எதிர்த்தார்கள்.. உண்மையை நியாய உணர்வோடு கூற வேண்டுமானால், காங்கிரஸிலேயே கூட பெரும்பாலும் தொண்டர்கள், தேசப்பிரிவினையை எதிர்த்தனர்.

ஆனால்…

முதுகெலும்பில்லாத, கையாலாகாத தலைவர்களின் காரணமாக நாடு துண்டாடப்பட்டது. 1947 மார்ச் வரை கூட காந்தி பிரிவினையை ஆதரிக்க வில்லை. பிரிவினை என்பது என் பிணத்தின் மீதுதான், நான் உயிரோடு இருக்கும் வரை, பிரிவினையை அனுமதிக்க மாட்டேன் என்றார்.

ஆனால், நாடு அவர் கண் முன்னே, அவர் உயிரோடு இருக்கும் போதே, அவருடைய ஒப்புதலோடு, துண்டாடப்பட்டது.

( தொடரும் )

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories