வல்லப பாய் படேல் மட்டும் பிரதமர் ஆகியிருந்தால்…?!

patel Gandhi nehrujpg - 2026

படேல் பிரதமராகும் வாய்ப்பு இருந்ததா? படேல் பிரதமராகியிருந்தால்…..? என்று மோடி சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். வல்லபாய் படேலுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பிருந்ததா? வரலாற்றைப் புரட்டியபோது….

இந்தியர்கள கையில் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதற்கான வேலைகளை 1946லேயேஆங்கிலேயர்கள் திட்டமிட ஆரம்பித்தார்கள். இந்தியா தனது புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் வரை ஓர் இடைக்கால அரசை காங்கிரஸ் தலைமையில் நிறுவுவது என முடிவாயிற்று. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் இருக்கிறார்களோ அவர்கள் பிரதமர் பதவியை ஏற்பார்கள் என்பது ஏற்பாடு.

அப்போது மெளலானா அபுல் கலாம் ஆசாத் கட்சியின் தலைவராக இருந்தார். ஆறுவருடங்களாக அவர்தான் இருந்து வந்தார். ஏனெனில் 1940ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பலதலைவர்கள் கைதாகி சிறையில் இருந்ததால் கட்சியில் தேர்தல் ஏதும் நடைபெற்றிருக்கவில்லை. ஆசாத் அவரே பொறுப்பில் தொடர விரும்பினார்.

ஆனால் காந்தி விரும்பவில்லை. ஆறாண்டுகள் தொடர்ந்த் பதவியில் இருந்ததால் புதிதாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதே முறை என்றார் காந்தி. நேரு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அவர் நம்பிக்கை. 1946ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வேட்பு மனுக்கள் (Nomination) பெறுவதற்கான இறுதித் தேதியாக முடிவு செய்யப்பட்டது. மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகள்தான் முன்மொழிய வேண்டும்

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

அப்போது 15 மாநிலக் கமிட்டிகள் இருந்தன. 12 கமிட்டிகள் வல்லபாய் பட்டேலின் பெயரை முன்மொழிந்தன. 3 கமிட்டிகள் யார் பெயரையும் முன் மொழியவில்லை. அதாவது எந்த ஒரு கமிட்டியும் நேருவின் பெயரை முன் மொழியவில்லை! காந்திக்கு அதிர்ச்சி நேருவைக் கூப்பிட்டு நிலைமையைச் சொன்னார்.

நேரு திகைத்துப் போனார். ஆனால் அவர் யாருக்கும் இரண்டாம் நிலையில் இருந்து நான் பணியாற்ற மாட்டேன் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். கட்சி உடைந்துவிடுமோ எனப் பயந்தார் காந்தி. அதைவிட நேரு இல்லை என்றால் வெள்ளைக்காரர்க்ள் ஏதாவது சாக்கு சொல்லி அதிகார மாற்றத்தைத் தட்டிக் கழிப்பார்களோ, அல்லது தள்ளிப் போடுவார்களோ என்ற கவலை ஏற்பட்டது.

கிருபளானியைக் கூப்பிட்டு காங்கிரஸ் செயற்குழு (காரிய கமிட்டி)வை நேருவின் பெயரை முன் மொழியச் சொல்லுமாறு சொன்னார். படேலைக் கூப்பிட்டு வாபஸ் வாங்கச் சொன்னார். மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகள் முன்மொழியாமலே நேரு ”போட்டியின்றி” பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படேல் விலகியதைக் கேள்விப்பட்ட ராஜேந்திர பிரசாத் ‘ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்காக ஓர் உண்மைத் தொண்டனை பலி கொடுத்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் சண்டை போட்டதாகச் சொல்வார்கள்

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

படேலுக்கும் நேருவிற்கும் எப்போதும் ஒத்துப் போனதில்லை. நேரு ராஜாஜியை இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக்க விரும்பினார், வேட்பு மனுவை விலக்கிக் கொள்ளுமாறு ராஜேந்திரப் பிரசாத்திடம் சொன்னார். பிரசாத் மறுத்துவிட்டார். தேரு தனது விருப்பங்களைத் திணிப்பதாக கட்சியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

கட்சிக்காரர்களை சமாதனப்படுத்துமாறு படேலிடம் கேட்டுக் கொண்டார். படேல் மறுத்துவிட்டார். இறுதியில் பிரசாத் ஜனாதிபதியானார். பிரதமருக்கு ஜனாதிபதி மூலம் படேல் செக் வைத்துவிட்டார்

அதன் பின் நேரு படேலை மறைமுகமாகப் புறக்கணித்தார். அவரது பொறுப்பில் இருந்த உள்துறையைக் கலந்து கொள்ளாமலே பல முடிவுகள் எடுத்தார்.

படேல் பிரதமராக வந்திருந்தால் ? இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். படேல் பல விஷயங்களில் உறுதியாக முடிவெடுத்தவர். அதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளானவர்.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுக்கும் யோசனையை முதலில் வரவேற்றவர் அவர்தான் என்பதாலும், சோம்நாத் கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டியவர் என்பதாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.

ஹிந்து மகா சபாவை தடை செய்ததால் ஹிந்துத்வாவாதிகளால் விமர்சிக்கப்பட்டவர். பிர்லா, சாராபாய் போன்ற முதலாளிகள் அவரது நண்பர்கள் என்பதால் சோஷலிஸ்ட்களால் வெறுக்கப்பட்டவர்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இரும்புக்கரம் கொண்டு சமஸ்தானங்களை இணைத்ததால் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர் என சிலர் அவரை விமர்சிப்பதுண்டு. ஆனால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவராக இருந்தார். அவர் இறந்த போது 3 லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள்.

அவர் பிரதமராக ஆகியிருந்தால் ஒன்று மட்டும் நடந்திருக்காது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைமுறை தலைமுறையாக பிரதமர்கள் ஆகும் வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்தில் இருந்திருக்காது!

  • பத்திரிகையாளர் மாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories