February 23, 2026, 5:09 AM
25 C
Chennai

தமிழகம் அறிய வேண்டிய வரலாற்று ஆய்வாளர் தொப – தொ. பரமசிவம்.

tho paramasivam - 2026

நேற்றிரவு (18/05/2019) திருநெல்வேலி சென்றபோது, வரலாற்று அறிஞர் தொப. (தொ.பரமசிவம்) அவர்களை பாளையங்கோட்டை தெற்கு பஜாரின் அருகேயுள்ள அவரின் இல்லத்தில் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது உடல் நலம் விசரித்தேன்.

அப்போது, பல வரலாற்று செய்திகளையும், தமிழக அரசியல் குறித்தும் நீண்டநேரம் விவாதித்தோம்.

அவர் சொன்னார். நீங்கள் அடிக்கடி சொல்லும் தகுதியே தடை என்பதே இன்றைய யதார்த்தம். இன்றைய அரசியலும் நீங்கள் கூறுவது போல சந்தை வியாபார அரசியலாகத் தான் இருக்கிறது. மக்கள் நல அரசியல் தடம் மாறிவிட்டது. உலகமயமாக்கல் போல் பொதுவாழ்வில் பணமயமாக்கல் ஆகிவிட்டது என்றார்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், வள்ளலார் குறித்தும் அவர் கடந்த காலத்தில் கடந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்தெல்லாம் நினைவுப்படுத்தி பேசினார். உடன் வந்த கவிஞர் கிருஷி, ஈர விறகும், காய்ந்த வாழை மட்டையை போல இன்றைக்கு எல்லா விடயங்களும் உள்ளன என்று குறிப்பிட்டார். உங்களை சுற்றி துப்பாக்கிச் சூடுகள் பலமுறை நடந்துள்ளது என்று என்னை நோக்கி கேட்டார். எனக்கு புரியவில்லை.

அவரே விவசாய சங்க போராட்டத்தின் போதும் உங்கள் கண்முன்னால் துப்பாக்கிச் சூடு நடந்தது, ஒரு காலத்தில் உங்களோடு மிகவும் நெருங்கிய சகாக்களான விடுதலைப் புலிகள் மீதும் ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடந்தது. இதுபோன்ற சம்பவங்களால் தான் அப்படி கூறினேன். இது தொடர்பாக நீங்கள் பெற்ற தகவல்களை நிறைய கூறவும் என்று கிருஷி கூறினார்.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த அருமையான நல்ல பேராசிரியர் தொப. வெறும் மரக்கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு எங்களிடம் அரைமணிநேரம் பேசினார். அம்பை பாரதி கண்ணனும் உடனிருந்தார். அவர் பேச பேச அறியப்படாத பல செய்திகளை கேட்டுக் கொண்டோம்.

இப்படிப்பட்ட அரிய பெரிய அறிஞர்களை அரசுகள் பாதுகாக்க வேண்டும். இது கடமை மட்டுமல்ல தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்ற தொ.ப. போன்ற ஆளுமைகள் இன்றைக்கு தேவை.

என்னுடைய ‘நிமிரவைக்கும் நெல்லை’ புத்தக வெளியீட்டு விழா – 2005 ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த போது, தொப. கலந்து கொண்டு உரையாடினார்.  அவரோடு தி.க.சி, தோப்பில் முகமது மீரான், மாலன், கழனியூரன், சுபக்கோ. நாராயணசாமி, ரசிகமணிணின் பேரன் தீப. நடராஜன், தமயந்தி போன்றோர்கள் எல்லாம் பங்கேற்றனர். அதன் பின் அவரைசந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

உங்களின் நிமிரவைக்கும் நெல்லை என்ற ஆவண வரலாற்று நூலில் கி.ரா.வின் வார்த்தைகளின்படி நெல்லை மாவட்டத்தின் கெசட் மட்டுமல்ல அதன் முத்திரைகளையும் அடையாளங்களும் அதில் உள்ளது என்றார்.மகிழ்ச்சி என்று விடைபெறும்போது குறிப்பிட்டார். அவர் நலம் பெற வேண்டும்.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories