ஒரே நூற்றாண்டில் ஜிகாதிகள் சீரழித்த காஷ்மீரம்

IMG 20190725 WA0013 - 2026

தொலைந்து போன ஸ்வர்கத்தைப் பற்றிய ஒரு பார்வை..!

இந்தப் படம் ஶ்ரீநகரில் (காஷ்மீர்) உள்ள ஸீலம் நதிக்கரையைப் பற்றிய சித்திரம். வரைந்த ஆண்டு 1872. வரைந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பிஷன்சிங்.

அந்த காலகட்டங்களில் ஶ்ரீநகர் ஒரு அமைதியான நகரமாக இருந்தது. கல் எரிபவர்களோ, தீவிரவாதிகளோ, புர்கா அணிந்தவர்களோ, கையில் ISIS கொடி பிடித்தவர்களோ எங்கும் காணப்படவில்லை.

அதற்கு பதிலாக காஷ்மீரி ஹிந்து பண்டிட்டுகள் ஸீலம் நதிக்கரையில்.. அதிகாலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டும், அந்த ஊர் ஹிந்து பெண்கள் முழங்கால் அளவு இருக்கும் தங்களின் விசேஷ உடைகளை அணிந்து கொண்டும் இந்த சித்திரத்தில் காணப்ப

அதோடு பிரயாணிகள் ஶ்ரீநகரில் உள்ள ஸீலம் நதியின் மேல் கட்டப்பட்ட ஸைனா காடல் பிரிட்ஜை பயன்படுத்துவதாக வரையப் பட்டுள்ளது. இந்த நதியின் கரையில்தான் மிகவும் பழமை வாய்ந்த கான்க்வா இ மௌலா என்னும் மசூதி இப்போது இருக்கிறது. இது முன் காலத்தில் ஒரு காளி கோவிலாக இருந்தது. அங்கு இந்த காஷ்மீர் பண்டிட்டுகள் காளியை வணங்கி வந்தனர்.

இப்போது மசூதியான இந்த இடத்தில் ஒரு ராம்ஜி கோவிலும் அதற்கான தனிப்பட்ட ப்ரத்யேக சிகாராவும் (நம் ஊர்களில் இதனை விமானம் என்று அழைப்போம். கோவில்களில் உள்ள விமானம்) இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இந்த சிகாராவின் மேல் குண்டு வீசப்பட்டு கோவிலும் சேர்ந்து உருக்குலைந்தது.


FB IMG 1564032260701 - 2026

இந்தப் படம் ஶ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஒரு காஷ்மீரி பண்டிட் வேதம் ஓதும் காட்சி.

இந்த படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1903. தால் ஏரியின் உண்மையான பெயர் மஹாசரிதா ஏரி (महासरिता). காலம் காலமாக இந்த ஏரியின் கரையில் காஷ்மீரி பண்டிட்கள் அதிகாலையில் சூரிய பகவானுக்கு அர்க்யம் விட்டு வேதங்களையும் மந்திரங்களையும் ஓதுவார்கள். இது பாரம்பரியமாக தொன்று தொட்டு நிகழ்ந்து வந்து கொண்டிருந்தது.

பிறகு.. 1931 – 32 ஆம் ஆண்டுகளில்.. காஷ்மீர் கலகம் ஏற்பட்டது. ஷேக் அப்துல்லாவின் முஸ்லீம் கான்பரன்ஸ் குண்டர்கள் (பின்னர் இது நேஷனல் கான்பரன்ஸ் – NC என்று மாற்றப்பட்டது) மஹாசரிதா ஏரியில் வேதம் ஓதும் காஷ்மீர் பண்டிட்கள் மீது கற்களை எரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தொல்லைகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் அங்கு வரும் பண்டிட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இவர்களின் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காமல் போய் முடிவாக காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் வீடு வாசல், சொத்து சுகம் அனைத்தையும் விட்டு விட்டு சொந்த தேசத்தில் அகதிகளாக பல மாநிலங்களில் தங்கும் நிலை ஏற்பட்டு.. இன்றுவரை தொடர்கிறது.

காஷ்மீரின் மஹாசரிதா ஏரி.. தால் லேக் ஆக மாறி அங்கிருந்த பண்டிட்டுகளை ஒழித்துக்கட்டி.. வேத பிராமணர்களுக்கும் அந்த ஏரிக்கும் இப்போது தொடர் பொழிந்து போனது.

TrueIndology
பிரேமா எஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories