அடை
தேவையானவை:
புழுங்கலரிசி – 1 டம்ளர்
துவரம்பருப்பு – 1/4 டம்ளர்
கருத்த உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
காயம் – சிறிதளவு
செய்முறை:
- புழுங்கலரிசி,பருப்பு வகைகளைச் சுடுநீரில் ஊற வைக்கவும்.
- இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மின் அரைப்பானில் ஊற வைத்த புருப்பு, அரிசியுடன் வெந்தயம்,காயம்,மிளகாய் வற்றல், 4 கறிவேப்பிலை,உப்பு போன்றனவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
- தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.
- அவியல்,தேங்கய் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னி அருமையான இணை. வெல்லம் தொட்டுக் கொண்டாலும் அமிர்தம் தான்.
கூடுதல் குறிப்புகள்
- மேற்கூறிய அடைக்கு அரிசி, பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதுமானது.
- வெங்காயம் சேர்க்க விரும்புவர்கள் அடை ஊற்றும் போது வெங்காயத்தைத் தூவிக் கொள்ளலாம்.
- புளிப்பு அடை வேண்டுபவர்கள் இந்த அடை மாவுடன் சிறிது மோர் கலந்து வார்த்து எடுக்கலாம்.
- குழந்தைகளுக்குப் பிடித்த சத்துக்கள் நிறைந்த அருமையான சிற்றுண்டி வகையான இந்த அடையை விரைவிலும் செய்து முடிக்கலாம்.