சிறுதானிய சட்னி
தேவையானவை:
கம்பு – 4 தேக்கரண்டி
கேழ்வரகு – 4 தேக்கரண்டி
தக்காளி – 5
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – முக்கால் தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும். பின் சிறுதீயில் கம்பு, கேழ்வரகு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
பின்னர், மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தக்காளியுடன் உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும். சுவையான சிறுதானிய சட்னி தயார். இட்லி, தோசை யுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.