அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தேள், பாம்பு, நாய், சிலந்தி, எலி, ஓணான், மனித, குதிரை கடிக்கு..!

health tips 1
health tips 1

சிலந்தி கடித்து விட்டதா?

ஆடாதொடை இலையை பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் சரி சமன் எடையாக எடுத்து, அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

ஓணான் கடிக்கு…

மூங்கில் குருத்து எடுத்து சாறு எடுக்க வேண்டும். 2 அவுன்ஸ் சாறில் மிளகு சூரணம் 10 கிராம் சேர்த்து காலை, மாலை மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும்.

தேன் குளவி கொட்டுக்கு…

கொட்டின இடத்தைத் தேய்க்கவே கூடாது. விஷம் இறங்கி அவதி அதிகமாகும். கொட்டுப்பட்ட இடத்திலுள்ள முள்ளை மட்டும் உடைத்து. விஷப்பையை மேலோடு கிழித்து எடுத்து விட்டு உடனே சிறிது மண்ணெண்ணெயைத் தேய்க்க வேண்டும்.

வெறி நாய் கடித்து விட்டதா?

பச்சை மஞ்சள், முப்பட்டையுள்ள பிரண்டை இரண்டையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து நல்லெண்ணெயில் சூடேற்றிக் கடித்த இடத்தில் மூன்று நாள்கள் வைத்துக் கட்டி வந்தால் வெறி நாய்க்கடி விஷம் நீங்கும்.

குதிரை கடித்து விட்டதா?

அமுக்கரா கிழங்கு 70 கிராம் சூரணித்து தினசரி இரண்டு வேளை சிட்டிகை அளவு சுத்தத் தேனில் குழப்பி சாப்பிடவும் அவுரி சமூலம் எடுத் தரைத்து சாறு பிழிந்து கடிவாயில் பூசி கட்டுப் போடவும். சில நாள்களில் குணம் தெரியும்.

குளவி கொட்டி விட்டதா?

விளாம்பழத்தின் ஓட்டை எடுத்து சிறிது நீர் சேர்த்து களிம்பு போல் அரைத்து கொட்டிய இடத்தில் பற்று போட வலி நிற்பதோடு வீக்கமும் வற்றிப் போகும்.

மனிதர் கடியா?

அவுரி வேர் 15 கிராம். நன்னாரி 15 கிராம் இரண்டையும் அரைத்துக்
கடிவாயில் பூசி வரவும். கொல்லஸ் கோவைக் கிழங்கை அரைத்து கடிவாயில் பூசி வந்தாலும் குணமாகும்.

பாம்பு கடிக்கு…

தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியுடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.

தேள் கடிக்கு…

புளியையும் சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்தால் நெருப்பு போல் சூடேறும். அதை அப்படியே கொட்டுவாயில் வைத்தால் விஷமிறங்கும்.

எலிக் கடிக்கு…

எலிக்கடி இரைப்பு நோயை உண்டுபண்ணும். அதன் விஷத்தை முறியடிக்க நாயுருவி விதைகளைக் கொண்டு வந்து காய வைத்து பட்டு போல் இடித்து ஒருசிட்டிகையளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை 20 நாள்கள் சாப்பிட குணம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories