அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நரம்பு தளர்ச்சி, மாதவிலக்கு, சளித்தொல்லை, இளமைக்கு..!

Published:

health tips - 2026

நரம்புத் தளர்ச்சிக்கு…

குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதிலிருக்கும் காபின் என்ற விஷச்சத்து நரம்புகளைத் தூண்டி, இதயத்தை பலவீனப் படுத்தும். நரம்புத் தளர்ச்சியால் விரல் நடுக்கம் ஏற்படும். அமுக்கராக்கிழங்கு வாங்கி வந்து நசுக்கி பனைவெல்லத்துடன் சேர்த்து காபி சாப்பிடுவது போல் காய்ச்சி சாப்பிட நடுக்கம் குறையும்.

மாங்காய்ப் பாலில் மருத்துவம்

மாங்காய்ப் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து தேள்கடி, தேனீ கடிகளுக்கு உபயோகிக்க உடனடி நிவாரணம் அளிக்கும்.

மாதவிலக்குத் தொந்தரவா?

வல்லாரை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்தரைத்து கோவி உருண்டை அளவு வெந்நீரில் கலக்கி காலையில் மட்டும் இரண்டு நாட்கள் குடித்து வர மாதவிலக்கு ஒழுங்காகி விடும்.

சளித் தொல்லைக்கு…

துளசி சாறு ஓர் அவுன்ஸ் குடித்து வர சளி தலைகாட்டாது ஓடி விடும்.

ஜாதிக்காயை நீர் விட்டரைத்து மூக்கின் மேல் பற்று போட நீர் கசிவது நின்று விடும்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

தூதுவளை சாறும் துளசி சாறும் சம பங்கு கலந்து காலை மாலை ஒரு ஸ்பூன் கொடுக்க குழந்தைகளின் சளித்தொல்லை குறையும்.

என்றும் இளமையாய் இருக்க…

காலையில் இஞ்சி சாறு குடியுங்கள். பகலில் சுக்கை இடித்து வெந்நீரில் சாப்பிடுங்கள். மாலையில் கடுக்காய் பொடியை வெந்நீரில் சாப்பிடுங்கள். அவ்வப்போது நெல்லிக்காயையும் தேனையும் உணவில் சேர்த்து வர என்றும் இளமையோடிருக்கலாம்.

Related articles

Recent articles

spot_img