கால் ஆணி சரியாக…
மருதோன்றி இலையுடன் மஞ்சள், வசம்பு. கற்பூரம் சேர்த்தரைத்து இரவில் ஆணி மீது வைத்துக் கட்டி காலையில் சுத்தப்படுத்தி வரவும். சில நாள்களில் ஆணி குணமாகும்
பித்த வெடிப்புக்கு…
கண்டங்கத்திரி இலையை சட்டியிலிட்டு அது முழுகும் அளவு தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சி இலை சிவந்தவுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை வெடிப்பின் மீது தடவி வர நல்ல குணம் தெரியும்.
அக்கி சரியாக…
இரண்டு மூன்று ஊமத்தன் இலைகளை சுத்தம் செய்து அரைத்து எருமை வெண்ணெயில் கலக்கி அக்கி மீது பூசிவர இரண்டொரு நாள்களில் குணமாகும்.
கபவாதம் ஜூரம் சரியாக…
கறிவேப்பிலை ஈர்க்கு, வேப்பம் ஈர்க்கு. முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 20 எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கித் தட்டி இதனுடன் சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து நன்கு சுண்டியதும் இறக்கி வேளைக்கு ஒரு ஸ்பூன் மூன்று வேளை இரண்டொரு நாள்கள் சாப்பிட குணமாகும்.
இரத்த பேதி குணமாக…
இரண்டு ஸ்பூன் முட்டைக்கோஸ் சாற்றுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரண்டொரு நாள்களில் இரத்தம் போவது நிற்கும்.