December 5, 2025, 7:57 PM
26.7 C
Chennai

ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் உலக நாடுகளே பொறுப்பு: இம்ரான் மிரட்டல்!

imrankan - 2025

எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது என்றும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப் பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாட்டிற்கு இடையே போர் மூளும் சூழல் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிவருகிறார்.

இந்நிலையில் இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு அருகே பாக், கோட்லி பகுதியில் சுமார் 2,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது. இந்திய எல்லையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கைபர் பக்துங்க்வா மாகாணம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் ரேடியோ பாகிஸ்தான் வானொலியில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும்; இந்தியா- பாகிஸ்தான் இடையே அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.

அதேபோல், காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா குறிப்பிட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories