பாகிஸ்தான் அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

paki 1 - 2026

இந்தியாவின் சந்திரயான் 2, வில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு மேல் நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டரின் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிப்பால் விஞ்ஞானிகள் வருத்தம் அடைந்தனர்.

இந்த நிகழ்வுகளை நேரடியாக காண, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் வந்த பிரதமர் மோடி உள்பட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்கள். `புதிய முயற்சிகளில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும்.

இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்’ என விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் மோடி. நாட்டின் ஜனாதிபதி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை நாட்டின் பல்வேறு பிரபலங்களும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரி, சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை கலாய்க்கும் விதமாக ட்வீட் செய்து வந்தார்.

பாகிஸ்தான் அமைச்சரின் ட்வீட்டுக்குத் தொடர்ந்து நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துவந்தனர். இதனைக் கவனித்த ஃபவாத் ஹுசைன், `இந்தியர்கள் என்னைத் திட்டுவதைப் பார்க்கும்போது நான் ஏதோ அவர்களின் நிலவு திட்டத்தை தோல்வியடையச் செய்ததுபோல் இருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி ஆறுதல் சொல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “சாட்டிலைட் குறித்து அரசியல்வாதி போன்று அல்லாமல் ஏதோ விண்வெளி வீரர் போல் உரையாற்றுகிறார் மோடி. இந்திய நாடாளுமன்றம், ஏழை நாட்டின் 900 கோடி ரூபாயை வீணாக்கியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இறுதியாக, அவர் பதிவு செய்த அந்த ட்வீட்டில் சாட்டிலைட் என்னும் வார்த்தையை தவறாகக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், அவரை வறுத்தெடுத்தனர். ஒரு நாட்டின் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு சாட்டிலைட்டின் ஸ்பெல்லிங்கூட தெரியவில்லை. முதலில் அதைக் கற்றுக்கொண்டு வாருங்கள். பிறகு பேசலாம்’ எனக் கலாய்த்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு சாட்டிலைட் ஸ்பெல்லிங் தான் தெரிய வேண்டாம், குறைந்தபட்சம் போன்களில் எழுத்துப் பிழைகளை தானாகவே திருத்தி சரியான ஸ்பெல்லிங்குளைத் தரும் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன் இருப்பது கூடவா தெரியவில்லை’ என்றும் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து ஃபவாத் ஹுசைன் செளத்திரி, கடந்த காலங்களில் சொதப்பலாக அளித்த பல்வேறு உரைகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories