தம்பி மனைவி செய்த கிண்டல்! பழி தீர்த்துக் கொண்ட அண்ணன்!

murder - 2026

நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் சவான். ஜெயஸ்ரீ என்ற மனைவியும் அவினாஷ் என்ற இரண்டு வயது மகனும் இருந்தனர். திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடுதிரும்பிய யோகேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த யோகேஷ், போலீஸ் உதவியுடன் வீட்டை திறக்கும் போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் படுக்கையறையில் உள்ள கட்டிலில் ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்க, அவருடன் சிறுவன் அவினாஷும் அதே போல் இருந்துள்ளான்.

சோதித்துப் பார்த்தபோது இருவரும் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. அந்த அறையில் படுக்கையறையின் ஓர் ஓரத்தில் யோகேஷின் அண்ணன் சுரேஷ் உட்கார்ந்திருந்தார் அவரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், பல அதிர்ச்சியான தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் சுரேஷ்.

31 வயதாகும் சுரேஷ் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். வேலை இல்லாமல் இருந்தபோதும் பெற்றோர்களையும் சகோதரர் குடும்பத்தையும் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்துக்கும் அடிமையாக இருந்திருக்கிறார்.

சமீபத்தில் குடித்துவிட்டு நள்ளிரவு நேரம் வீட்டுக்கு வர பெற்றோர்கள், சகோதரர் யோகேஷ் மற்றும் அவரின் மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் சுரேஷை கடுமையாக திட்டியுள்ளனர். மேலும், அவருக்கு வேலை இல்லாததைச் சுட்டிக் காட்டி, `இந்த வீட்டில் உனக்கு அனுமதி இல்லை’ எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளனர்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இந்தச் சம்பவத்தால் கடும் சோகமடைந்த சுரேஷ், சில நாள்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதற்கிடையேதான் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் சுரேஷுக்கு வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த உற்சாகத்தில் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்போது அவரின் பெற்றோர் கணபதி பூஜைக்காக சொந்த ஊருக்குச் செல்ல, தம்பி யோகேஷும் வேலைக்குச் சென்றுவிடவே வீட்டில் ஜெயஸ்ரீயும் சிறுவன் அவினாஷ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு வேலை இல்லாமல் இருந்தபோது ஜெயஸ்ரீ கிண்டல் செய்ததை சுட்டிக்காட்டி அவருடன் விவாதம் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில் விவாதம் முற்றவே அவரையும் சிறுவனையும் தலையணை வைத்து அமுக்கிக் கொன்றுள்ளார். இந்தக் குற்றத்தை காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ள சுரேஷ், `வேலை இல்லாமல் இருந்ததால் என்னைக் கடுமையாக கிண்டல் செய்தனர். மேலும், என்னை வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கவே அவர்களைக் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுரேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் இறந்துகிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்வதற்கு முன்பு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories