February 21, 2026, 12:09 AM
26.7 C
Chennai

10 வயதிலிருந்து வன்கொடுமைக்கு ஆளான சிறுமி! குடும்பத்தினரே செய்த துரோகம்!

vankodumai - 2026

12 வயது சிறுமி 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளியின் மூலம் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் அச்சிறுமி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளித்தவர் ‘ஒரு நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,’இந்தச் சிறுமி என்னிடம் கூறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை 10 வயது முதல் அவரது குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

முதன் முதலாக அந்தச் சிறுமியை அவரது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அதற்கு அவர் அக்குடும்பத்தினருக்கு பணம் கொடுத்துள்ளார். இதன்பின்னர் அச்சிறுமியை 30 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் வறுமைதான் காரணமாம். அவர் என்னிடம் தெரிவித்தார்.

12yrs child - 2026

அவரது தந்தைக்கு வேலை இல்லாததால் குடும்பம் பெரும் வறுமையில் இருந்தது. இதனால் அவரது தந்தை முதலில் சிறுமியின் தாயை பாலியல் தொழிக்கு தள்ள முற்பட்டுள்ளார். அதற்குப் பிறகு இந்தச் சிறுமியையும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தியுள்ளார்’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அத்துடன் அச்சிறுமியின் தந்தை மற்றும் இருவரையும் கைது செய்தனர்.

கைதான இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியின் தந்தை மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியை காவல்துறையினர் காப்பகத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

அச்சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவர்,’தினமும் இரவு அச்சிறுமியின் அழுகை சத்தம் கேட்கும். நாங்கள் அது குடும்ப தகராறாக இருக்கும் என்று நினைத்து அதில் தலையிட்டத்தில்லை’ எனத் தெரிவித்தார்.

இந்தச் சிறுமியின் வீட்டில் எதுவும் சரியாக இல்லை என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் பள்ளிக்கூடத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதன்பிறகு தான் அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாய், ‘இது முழுக்க பொய். எனக்கு என்னுடைய மகள் திரும்ப வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இச்சிறுமி காப்பகத்திற்கு செல்லும் முன்னர் தனது வீட்டின் கதவில் ‘என்னை மன்னித்து விடுங்கள் அம்மா’ என எழுதிவிட்டு சென்றுள்ளார். 12 வயது சிறுமி ஒருவர் 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories