10 வயதிலிருந்து வன்கொடுமைக்கு ஆளான சிறுமி! குடும்பத்தினரே செய்த துரோகம்!

vankodumai - 2026

12 வயது சிறுமி 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளியின் மூலம் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் அச்சிறுமி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளித்தவர் ‘ஒரு நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,’இந்தச் சிறுமி என்னிடம் கூறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை 10 வயது முதல் அவரது குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

முதன் முதலாக அந்தச் சிறுமியை அவரது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அதற்கு அவர் அக்குடும்பத்தினருக்கு பணம் கொடுத்துள்ளார். இதன்பின்னர் அச்சிறுமியை 30 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் வறுமைதான் காரணமாம். அவர் என்னிடம் தெரிவித்தார்.

12yrs child - 2026

அவரது தந்தைக்கு வேலை இல்லாததால் குடும்பம் பெரும் வறுமையில் இருந்தது. இதனால் அவரது தந்தை முதலில் சிறுமியின் தாயை பாலியல் தொழிக்கு தள்ள முற்பட்டுள்ளார். அதற்குப் பிறகு இந்தச் சிறுமியையும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தியுள்ளார்’ எனத் தெரிவித்தார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இதனைத் தொடர்ந்து இந்த மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அத்துடன் அச்சிறுமியின் தந்தை மற்றும் இருவரையும் கைது செய்தனர்.

கைதான இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியின் தந்தை மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியை காவல்துறையினர் காப்பகத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

அச்சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவர்,’தினமும் இரவு அச்சிறுமியின் அழுகை சத்தம் கேட்கும். நாங்கள் அது குடும்ப தகராறாக இருக்கும் என்று நினைத்து அதில் தலையிட்டத்தில்லை’ எனத் தெரிவித்தார்.

இந்தச் சிறுமியின் வீட்டில் எதுவும் சரியாக இல்லை என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் பள்ளிக்கூடத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதன்பிறகு தான் அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாய், ‘இது முழுக்க பொய். எனக்கு என்னுடைய மகள் திரும்ப வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இச்சிறுமி காப்பகத்திற்கு செல்லும் முன்னர் தனது வீட்டின் கதவில் ‘என்னை மன்னித்து விடுங்கள் அம்மா’ என எழுதிவிட்டு சென்றுள்ளார். 12 வயது சிறுமி ஒருவர் 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories