புது தில்லி: மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து அஜிஸ் குரேஷியை மத்திய அரசு இன்று திடீரென நீக்கியது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மிசோரம் ஆளுநர் பதவியில் இருந்து குரேஷி விடுவிக்கப்படுகிறார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை மிசோரம் ஆளுநர் பொறுப்பை மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கூடுதலாகக் கவனிப்பார் – என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் மிசோரம் மாநிலத்தில் 6 ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மிசோராம் மாநில ஆளுநர் திடீர் பதவி நீக்கம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

