அமேதிக்கு விரைவில் வருவார் ராகுல்: சோனியா காந்தி

sonia-amethi அமேதி: அமேதி தொகுதிக்கு விரைவில் வந்து மக்களைச் சந்திப்பார் ராகுல் காந்தி என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சோனியா காந்தி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தி விடுமுறை எடுத்து வெளியில் சென்றுள்ள நிலையில், தொகுதி மக்களை அவருக்கு பதிலாக சோனிய காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேபரேலி, அமேதி தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதனை நாங்கள் தீர்த்து வைப்போம். ராகுல் காந்தி ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்றார் சோனியா காந்தி. முன்னதாக, தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் உள்ள பச்வார், பந்திப்பூர், சிவ்புரி ஆகிய கிராமங்களுக்கு சோனியா காந்தி சென்றார். அங்கு அவரிடம், திடீர் மழையால் கோதுமை, கடுகு ஆகிய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறையிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்ததா? என சோனியா காந்தி கேட்டார். அதற்கு அவர்கள், மத்திய அரசின் உதவிகள் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால் உத்தரப் பிரதேச அரசு அறிவித்த உதவி இன்னமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்ட சோனியா காந்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு, சர்வோதயா, உதர்பாரா கிராமங்களுக்குச் சென்ற அவர், அண்மையில் ரயில் விபத்தில் உயிரிழந்த சிவேந்திர சிங், சிட்ல பிரசாத் மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories