வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

Published:

Yoga and meditation in Malaysia புது தில்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.Letter from ISIS to IAHV and AOL Malaysia- 2 வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் மலேசியா சென்றிருந்தார். அப்போது அவருக்கு கூரியர் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து வாழும் கலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய தகவல்: கொலை மிரட்டல் கடிதம் சில நாட்களுக்கு முன்பு மலேசிய பயணத்தின்போது வந்தது. அந்த நேரம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கம்போடியாவில் இருந்தார். கொலை மிரட்டல் பற்றி உடனே இந்திய தூதரகம் உள்பட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் என்று கூறி 3 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. நீங்கள் உங்களின் வாழும் கலை அமைப்பைத் தொடர்ந்து நடத்தினால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் சென்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வன்முறையை கைவிடுமாறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை கேட்டுக் கொண்டார். மலேசியா பினாங்கில் உள்ள ஹோட்டல் ஜென்னின் மேலாளர் கெவின் வெய்ட் ஹெட்டுக்கு ஒரு கடிதமும், மலேசியாவில் உள்ள வாழும் கலை அமைப்பின் இயக்குனர் அம்பிகா மேனனுக்கு ஒரு கடிதமும், வாழும் கலை அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ் இ மெய்க்கு ஒரு கடிதமும் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியா பினாங்கில் பத்தாயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் ரவிசங்கர் கலந்து கொண்டார். பின்னர் மாலை நேரத்தில் பட்டு கவான் மைதானத்தில் 70ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசினார். Cover of letter to IAHVCover of letter to IAHV-2

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img