இவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா?!

Published:

swapna svbc channel - 2026

ஒய்எஸ்ஆர் கட்சியின் தெலுங்கு டிவி சேனல் ‘சாக்ஷி’யின் முன்னாள் தொகுப்பாளினி மற்றும் திரைப்பட இயக்குனர் சீனிவாச ரெட்டி இருவருக்கும் ஜெகன் முக்கிய பதவிகளை அளித்து உள்ளார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் அரசியல் மறுவாழ்வு இல்லமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு வெளிவந்தாலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அவற்றைப் புறக்கணித்து விட்டு முன்னுக்குச் செல்லுகிறது. புதியதாக (எஸ்விபிசி) ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மேலும் இருவருக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.

எஸ்விபிசி போர்டின் டைரக்டர்களாக டிவி ஆங்கர் ஸ்வப்னா, டைரக்டர் சீனிவாச ரெட்டி இருவரையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. எஸ்விபிசி சேர்மனாக நகைச்சுவை நடிகர் பிருத்விராஜ்பாலிரெட்டியை ஏற்கெனவே நியமித்தது அனைவரும் அறிந்ததே. அவரோடு சேர்ந்து இந்த டைரக்டர்கள் இருவரும் பணியாற்ற உள்ளார்கள்.

உண்மையில் எஸ்விபிசி போர்டின் சேர்மனோடு ஒன்று சேர்ந்து டிடிடி நிர்வாக மண்டலி உறுப்பினர்களை டைரக்டர்களாக நியமிப்பது வழக்கம். ஆனால் அரசாங்கம் இந்த முறை அந்த சம்பிரதாயத்தில் இருந்து விலகி புதிதாக இருவருக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

Balireddy Prudhviraj jagan - 2026

டிவி ஆங்கர் ஸ்வப்னா முன்பு தூர்தர்ஷன், டிவி9 சேனல்களில் பணியாற்றி தனக்கென்று தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். டிவி9 ல் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பின் சாக்ஷி சேனலில் சேர்ந்தார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

சிறிது காலத்திற்குப் பின் அதில் இருந்து வெளியேறினாலும் சாக்ஷி டிவிக்கு கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். தற்போது டிவி10 சேனலில் பணியாற்றும் ஸ்வப்னா சொந்தமாக ஒரு வெப் சேனலை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஜகன் மீது தன் பணிவை பறைசாற்றிய வண்ணம் உள்ளார்.

அன்றைய தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு தன் இன்டர்வியூக்கள் மூலம் சிக்கல்கள் உண்டாக்கி, ஜகன் கட்சிக்கு அனுகூலமாக நடந்துகொண்டார். தேர்தலின் போது ஜெகனுக்கு அணில் போல் உதவி செய்து ஜெகன் பதவிக்கு வர உழைத்தார்.

தன்மீது அணில் போல் பக்தியை நிரூபித்த ஸ்வப்னாவுக்கு எஸ்விபிசி யில் டைரக்டர் பதவியை ஒப்படைத்து ஜெகன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது. சாக்ஷி டிவியில் வேலை பார்த்த பலருக்கும் நாமினேடட் பதவிகள் கொடுத்துள்ளார் என்றும் அவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் அரசு கஜானாவில் இருந்து லட்சக்கணக்கில் கொள்ளையடித்துக் கொடுக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.

ஆயினும் ஜகன் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தன்னை நம்பியவர்களுக்கு தான் நினைத்த வண்ணம் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img