December 6, 2025, 4:16 AM
24.9 C
Chennai

இவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா?!

swapna svbc channel - 2025

ஒய்எஸ்ஆர் கட்சியின் தெலுங்கு டிவி சேனல் ‘சாக்ஷி’யின் முன்னாள் தொகுப்பாளினி மற்றும் திரைப்பட இயக்குனர் சீனிவாச ரெட்டி இருவருக்கும் ஜெகன் முக்கிய பதவிகளை அளித்து உள்ளார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் அரசியல் மறுவாழ்வு இல்லமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு வெளிவந்தாலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அவற்றைப் புறக்கணித்து விட்டு முன்னுக்குச் செல்லுகிறது. புதியதாக (எஸ்விபிசி) ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மேலும் இருவருக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.

எஸ்விபிசி போர்டின் டைரக்டர்களாக டிவி ஆங்கர் ஸ்வப்னா, டைரக்டர் சீனிவாச ரெட்டி இருவரையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. எஸ்விபிசி சேர்மனாக நகைச்சுவை நடிகர் பிருத்விராஜ்பாலிரெட்டியை ஏற்கெனவே நியமித்தது அனைவரும் அறிந்ததே. அவரோடு சேர்ந்து இந்த டைரக்டர்கள் இருவரும் பணியாற்ற உள்ளார்கள்.

உண்மையில் எஸ்விபிசி போர்டின் சேர்மனோடு ஒன்று சேர்ந்து டிடிடி நிர்வாக மண்டலி உறுப்பினர்களை டைரக்டர்களாக நியமிப்பது வழக்கம். ஆனால் அரசாங்கம் இந்த முறை அந்த சம்பிரதாயத்தில் இருந்து விலகி புதிதாக இருவருக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

Balireddy Prudhviraj jagan - 2025

டிவி ஆங்கர் ஸ்வப்னா முன்பு தூர்தர்ஷன், டிவி9 சேனல்களில் பணியாற்றி தனக்கென்று தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். டிவி9 ல் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பின் சாக்ஷி சேனலில் சேர்ந்தார்.

சிறிது காலத்திற்குப் பின் அதில் இருந்து வெளியேறினாலும் சாக்ஷி டிவிக்கு கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். தற்போது டிவி10 சேனலில் பணியாற்றும் ஸ்வப்னா சொந்தமாக ஒரு வெப் சேனலை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஜகன் மீது தன் பணிவை பறைசாற்றிய வண்ணம் உள்ளார்.

அன்றைய தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு தன் இன்டர்வியூக்கள் மூலம் சிக்கல்கள் உண்டாக்கி, ஜகன் கட்சிக்கு அனுகூலமாக நடந்துகொண்டார். தேர்தலின் போது ஜெகனுக்கு அணில் போல் உதவி செய்து ஜெகன் பதவிக்கு வர உழைத்தார்.

தன்மீது அணில் போல் பக்தியை நிரூபித்த ஸ்வப்னாவுக்கு எஸ்விபிசி யில் டைரக்டர் பதவியை ஒப்படைத்து ஜெகன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது. சாக்ஷி டிவியில் வேலை பார்த்த பலருக்கும் நாமினேடட் பதவிகள் கொடுத்துள்ளார் என்றும் அவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் அரசு கஜானாவில் இருந்து லட்சக்கணக்கில் கொள்ளையடித்துக் கொடுக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.

ஆயினும் ஜகன் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தன்னை நம்பியவர்களுக்கு தான் நினைத்த வண்ணம் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories