December 6, 2025, 5:12 AM
24.9 C
Chennai

பாஜக., மற்றும் மோடியை எதிர்த்து… தவறு செய்து விட்டேன்: புலம்பும் சந்திரபாபு நாயுடு!

modi chandrababu - 2025

பிஜேபியோடு கூட்டணி வைக்காததால் தெலுங்கு தேசம் கட்சி தோற்றுவிட்டது என்பது சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிந்துவிட்டது! அண்மையில் விசாகப்பட்டினத்தில் பயணம் மேற்கொண்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சில சுவையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசை பகைத்துக் கொண்டதால், தாம் மிகவும் நஷ்டம் அடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். தாம் தேவையற்ற விதத்தில் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் இத்தனை தொல்லைகள் இருந்திருக்காது என்றார் .

மத்திய அரசை எதிர்த்ததால் மாநிலத்திற்கு எந்த லாபமும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரிய நஷ்டம் விளைந்துவிட்டது… என்றார் சந்திரபாபு நாயுடு. புதிதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ள இந்தக் கருத்துகள் தெலுங்கு மாநிலங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன.

இத்தனை நாட்களாக சந்திரபாபு நாயுடு எங்கே சென்றாலும் தன் கட்சியின் தோல்விக்கு காரணம் விளங்கவில்லை என்று புலம்பி வந்தார். ஆனால் இப்போது அவர் கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்கையில் பிஜேபியோடு கூட்டணி அமைக்காததால் தான் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தது என்ற விஷயம் சந்திரபாபு நாயுடுவுக்கு விளங்கி விட்டதா? அல்லது மீண்டும் பிஜேபி கூட்டணியில் சேர்வதற்காக பாபு முயற்சிக்கிறாரா? என்ற ஐயங்கள் தெலுங்கு மாநிலங்களில் சர்ச்சையாக வெளிப்பட்டு வருகிறன்றன.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் ஏற்கெனவே பிஜேபியில் சேர்ந்துள்ள நிலையில் மற்றும் சிலரும் பிஜேபியில் செய்வதற்கான வழிவகைகளை தேடி வருகிறார்கள். இந்தச் சூழலில் மீண்டும் சந்திரபாபு நாயுடு தாமரைக் குடும்பத்தை நெருங்கிச் செல்லும் பிரயத்தனத்தில் இருப்பது தெரிகிறது. அதனால் சில தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்கள்.

இன்றோ நாளையோ நாயுடு பிஜேபியோடு கைகோர்க்கப் போகையில்… எந்த கட்சியில் இருந்தால் என்ன? எதற்காக இப்போது கட்சி மாற வேண்டும் என்று அமைதி காத்து வருவதாகத் தெரிகிறது. மீதி உள்ளவர்களையாவது கட்சி மாறாமல் பாதுகாக்கும் எண்ணத்தில்தான் நாயுடு இவ்வாறு வியூகம் வகுக்கறாரோ என்ற விவாதமும் நடந்து வருகிறது.

மொத்தத்தில் சந்திரபாபு நாயுடு தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டாரா ? அல்லது அவருக்கு ஞானோதயம் வந்து விட்டதா ? என்பது சரியாகப் புரியாவிட்டாலும் அவர் பிஜேபிக்கு மறைமுகமாக சிக்னல் அளித்துள்ள விஷயம் மட்டும் நன்றாக புரிகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories