December 6, 2025, 3:26 AM
24.9 C
Chennai

தெலங்காணா ஆர்டிசி டிரைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தீக்குளித்து தற்கொலை.

தற்கொலைக்கு முயன்ற தெலங்காணா ஆர்டிசி டிரைவர் சீனிவாச ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்காணா ஆர்டிசி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஒரு டிரைவர் பலியாவதற்கு துணிந்தார் .வேலை போய்விட்டது என்ற தீவிர விரக்தியில் அவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .

கம்மம் நகரில் சனிக்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்த டிரைவர் சீனிவாச ரெட்டி ஞாயிறன்று காலை மரணமடைந்தார்.

ஆர்டிசி தொழிலாளர்கள் தர்ணா நடத்தி வரும் நிலையில் தீவிர மன வேதனைக்கு ஆளான ஶ்ரீனிவாஸ் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

90% எரிந்து போன நிலையில் அவரை உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத் அழைத்து வந்தனர். கஞ்சன்பாக் அப்போலோ டிஆர்டிஓ மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிறு காலை உயிரிழந்தார்.

அவர் இறந்ததையொட்டி போலீசார் மருத்துவமனையைச் சுற்றி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மருத்துவமனை எதிரில் ஆர்டிசி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கோஷமிடவே போலீசார் பலரை கைது செய்தனர் .

மிகுந்த மனவேதனையில் இருந்த ஸ்ரீனிவாசைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பினர் சக தொழிலாளர்கள். ஆனால் தன் வீட்டின் கேட் அருகில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்ட சீனிவாச ரெட்டி உடல் பற்றி எரிகையில்…” நான் என்ன ஆனாலும் பரவாயில்லை… 48 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும்… எத்தனை பேரை ஹோமத்தில் ஆகுதி ஆக்குவாய்..கேசிஆர்?” என்று பெரிய குரலெடுத்துக் கத்தினார்.

சீனிவாச ரெட்டியின் மரணத்திற்கு அரசாங்கமே காரணம் என்று சிபிஎம் மாநில காரியதரிசி தம்மினேனி வீரபத்ரம் குற்றம் சாட்டினார். அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று டிமாண்ட் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories