
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை. இந்த ஸ்தோத்திரம் உருவமற்ற பரம்பொருளை வெளிக்காட்டும் ஆறு பாடல்களால் ஆனது. ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வோர் உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் இது அளிக்கும்.
நிர்வாண ஷட்கம்
மனோபு³த்³த்⁴யஹங்காரசித்தானி நாஹம்ʼ
ந ச ஶ்ரோத்ரஜிஹ்வே ந ச க்⁴ராணனேத்ரே |
ந ச வ்யோமபூ⁴மி꞉ ந தேஜோ ந வாயு꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 1||
நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.
ந ச ப்ராணஸஞ்ஜ்ஞோ ந வை பஞ்சவாயு꞉
ந வா ஸப்ததா⁴துர்ன வா பஞ்சகோஶ ꞉ |
ந வாக் பாணிபாதௌ³ ந சோபஸ்த²பாயூ
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 2||
நான் பிராணனும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல, நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல, நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.
ந மே த்³வேஷராகௌ³ ந மே லோப⁴மோஹௌ
மதோ³ நைவ மே நைவ மாத்ஸர்யபா⁴வ꞉ |
ந த⁴ர்மோ ந சார்தோ² ந காமோ ந மோக்ஷ꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 3||
என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை, எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்
ந புண்யம்ʼ ந பாபம்ʼ ந ஸௌக்²யம்ʼ ந து³꞉க²ம்ʼ
ந மந்த்ரோ ந தீர்த²ம்ʼ ந வேதா³ ந யஜ்ஞா꞉ |
அஹம்ʼ போ⁴ஜனம்ʼ நைவ போ⁴ஜ்யம்ʼ ந போ⁴க்தா
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 4||
எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை, எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை, நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல, நான் விழிப்புணர்வு, பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!
ந மே ம்ருʼத்யுஶங்கா ந மே ஜாதிபே⁴த³꞉
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந ப³ந்து⁴ர்ன மித்ரம்ʼ கு³ருர்னைவ ஶிஷ்ய꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 5||
எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி பேதம் இல்லை, எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை, நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!
அஹம்ʼ நிர்விகல்போ நிராகாரரூபோ
விபு⁴ர்வ்யாப்ய ஸர்வத்ர ஸர்வேந்த்³ரியாணாம் |
ந சாஸங்க³தம்ʼ நைவ முக்திர்ன ப³ந்த⁴꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 6||
நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது, நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன், நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறை பிடிக்கப் பட்டவனாகவோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!




