தெலங்கானா ஆர்டிசி., போராட்டம்: முதல்வர் கேசிஆர் எடுத்த முக்கிய முடிவு!

chandrasekara rao - 2026

ஆர்டிசி போராட்டம் குறித்து தெலங்காணா அரசு முக்கியமான முடிவு எடுத்துள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ஆர்டிசி.,யின் செயல் இயக்குனர்களுடன் சேர்ந்து ஆர்டிசி மேலாண் இயக்குனர் ஒரு கமிட்டியை நியமித்துள்ளார். இந்தக் கமிட்டி அளிக்கும் அறிக்கையின் படி மாநில உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

ஆர்டிசி.,யை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர் சங்கங்கள் தமக்குத்தாமே விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அந்த அடிப்படையில் தொழிலாளர்களின் பிற கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கேசிஆர் முடிவு எடுத்துள்ளதாக அக்.22 செவ்வாய்க்கிழமை நேற்று இரவு ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்துக் கழகம் – ஆர்டிசி., போராட்டம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதன் அடிப்படையில் முதல்வர் கேசிஆர் பிரகதி பவனில் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமார் மற்றும் உயர் அதிகாரிகளோடு கலந்து பேச்சு நடத்தினார்.

rtc telangana3 - 2026

ஆர்டிசி.,யை அரசோடு இணைப்பதாக அறிவித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு உடன் படுவோம் என்று தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் முதலில் அறிவித்திருந்தார்கள். அதுவே தங்களின் முதல் கோரிக்கை என்று கூட கூறினார்கள். ஆனால் நீதிமன்ற விசாரணையின் போது ஆர்டிசியை அரசோடு இணைப்பது குறித்து பிடிவாதம் பிடிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

தொழிலாளர் சங்கங்களின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் பிரகாஷ் ரெட்டி கூட ஆர்டிசியை அரசோடு இணைக்கும் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று தொழிலாளர்கள் எப்போதும் கூறவில்லை என்றார்.

எனவே, அரசோடு இணைக்கும் கோரிக்கை ஒன்று மட்டுமே முக்கியம் அல்ல என்றும் அவர் வாதிட்டார். அதனால் தொழிலாளர்கள் இணைப்பு கோரிக்கையை விட்டு விட்டதாகத் தெரிகிறது என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.

உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவில் கூட அதே விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார் என்று முதல்வர் கேசிஆர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். தொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட கோரிக்கைகளில் 21 அம்சங்களை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் கூறினார்.

rtc telangana1 - 2026

நீதிமன்ற உத்தரவின்படி அந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்போம். அதற்காக ஆய்வு மேற் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆர்டிசி., மேலாண் இயக்குனராக உள்ள போக்குவரத்து துறை முக்கிய செயலர் சுனில் சர்மா, முதல்வர் கேசிஆர் உத்தரவுப்படி ஆறு அதிகாரிகளைக் கொண்ட கமிட்டியை நியமித்துள்ளார். நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த 21 அம்சங்களை இந்த கமிட்டி பரிசீலித்து ஓரிரு நாட்களில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories