December 5, 2025, 9:06 PM
26.6 C
Chennai

தெலங்கானா ஆர்டிசி., போராட்டம்: முதல்வர் கேசிஆர் எடுத்த முக்கிய முடிவு!

chandrasekara rao - 2025

ஆர்டிசி போராட்டம் குறித்து தெலங்காணா அரசு முக்கியமான முடிவு எடுத்துள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ஆர்டிசி.,யின் செயல் இயக்குனர்களுடன் சேர்ந்து ஆர்டிசி மேலாண் இயக்குனர் ஒரு கமிட்டியை நியமித்துள்ளார். இந்தக் கமிட்டி அளிக்கும் அறிக்கையின் படி மாநில உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

ஆர்டிசி.,யை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர் சங்கங்கள் தமக்குத்தாமே விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அந்த அடிப்படையில் தொழிலாளர்களின் பிற கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கேசிஆர் முடிவு எடுத்துள்ளதாக அக்.22 செவ்வாய்க்கிழமை நேற்று இரவு ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்துக் கழகம் – ஆர்டிசி., போராட்டம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதன் அடிப்படையில் முதல்வர் கேசிஆர் பிரகதி பவனில் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமார் மற்றும் உயர் அதிகாரிகளோடு கலந்து பேச்சு நடத்தினார்.

rtc telangana3 - 2025

ஆர்டிசி.,யை அரசோடு இணைப்பதாக அறிவித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு உடன் படுவோம் என்று தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் முதலில் அறிவித்திருந்தார்கள். அதுவே தங்களின் முதல் கோரிக்கை என்று கூட கூறினார்கள். ஆனால் நீதிமன்ற விசாரணையின் போது ஆர்டிசியை அரசோடு இணைப்பது குறித்து பிடிவாதம் பிடிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.

தொழிலாளர் சங்கங்களின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் பிரகாஷ் ரெட்டி கூட ஆர்டிசியை அரசோடு இணைக்கும் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று தொழிலாளர்கள் எப்போதும் கூறவில்லை என்றார்.

எனவே, அரசோடு இணைக்கும் கோரிக்கை ஒன்று மட்டுமே முக்கியம் அல்ல என்றும் அவர் வாதிட்டார். அதனால் தொழிலாளர்கள் இணைப்பு கோரிக்கையை விட்டு விட்டதாகத் தெரிகிறது என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.

உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவில் கூட அதே விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார் என்று முதல்வர் கேசிஆர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். தொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட கோரிக்கைகளில் 21 அம்சங்களை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் கூறினார்.

rtc telangana1 - 2025

நீதிமன்ற உத்தரவின்படி அந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்போம். அதற்காக ஆய்வு மேற் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆர்டிசி., மேலாண் இயக்குனராக உள்ள போக்குவரத்து துறை முக்கிய செயலர் சுனில் சர்மா, முதல்வர் கேசிஆர் உத்தரவுப்படி ஆறு அதிகாரிகளைக் கொண்ட கமிட்டியை நியமித்துள்ளார். நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த 21 அம்சங்களை இந்த கமிட்டி பரிசீலித்து ஓரிரு நாட்களில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories