பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்திய நிதிஷ்குமாருக்கு மோடி பாராட்டு

பாட்னா:

மதுவிலக்கை அமல்படுத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். பதிலுக்கு நிதிஷும் மோடியைப் பாராட்டிப் பேசினார். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் சீக்கிய மத குருவான குருகோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள பிரதமர் நரேந்திரமோடியும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது…

பீகார் மாநிலத்தில் முன்னோ டியான முழு மதுவிலக்கை அமல்படுத்திய முதல்-மந்திரி நிதிஷ்குமாரை மனம் திறந்து பாராட்டுகிறேன். அவரது துணிச்சலான முடிவு இது. மதுவில் இருந்து எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்க நிதிஷ்குமார் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சமூக மாற்றத்துக்காக ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்வது கடினமானது. இதனை நிதிஷ்குமார் செய்துள்ளார். இது நிதிஷ்குமார் அல்லது அரசியல் கட்சியினரின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். பீகாரில் மதுவிலக்கு வெற்றி பெற்றால், நாடு முழுவதற்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றார். பதிலுக்கு குஜராத்தின் மதுவிலக்கு குறித்துப் பேசிய நிதிஷ், மோடியைப் பாராட்டிப் பேசினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியை முறித்துக்கொண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. அதில் இருந்து அரசியலில் நரேந்திரமோடியும், நிதிஷ்குமாரும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த நவம்பர் 8-ந் தேதி கருப்பு பணம், கள்ளநோட்டை ஒழிப்பதற்காக உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை நரேந்திரமோடி செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே நிதிஷ்குமாரின் மதுவிலக்கு திட்டத்துக்கு மோடி பாராட்டியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories