December 5, 2025, 6:20 PM
26.7 C
Chennai

ஒருதலைக் காதலில் கல்லூரி புகுந்து மருத்துவ மாணவியை எரித்து முன்னாள் மாணவர் வெறிச்செயல்

திருவனந்தபுரம்:

ஒருதலைக் காதலில் கல்லூரிக்குள் புகுந்து, மருத்துவ மாணவியை தீவைத்து எரித்த, முன்னாள் மாணவர் தானும் தீயில் கருகி மாண்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி (21) என்பவர் 3ஆவது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார். கொல்லம் அருகே உள்ள நீண்டகரையைச் சேர்ந்த ஆதர்ஷ் (25), இதே கல்லூரியின் முன்னாள் மாணவர். இவர் அந்தக் கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார்.

அவரது கடைக்கு மாணவி லட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லட்சுமி மறுத்து விட்டார். அவரிடம் நட்புடனேயே பழகியதாக லட்சுமி கூறியுள்ளார். ஆனாலும் ஆதர்ஷ் தனது காதலை கைவிடாமல், தன்னைக் காதலிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால் அவரது கடைக்குச் செல்வதை லட்சுமி தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ், நேற்று பகல் கல்லூரி உணவு இடைவேளையின் போது கல்லூரிக்குள் நுழைந்தார். லட்சுமி படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர் தன்னைக் காதலிக்கும் படி லட்சுமியிடம் மிரட்டியுள்ளார். ஆனால் அவரைக் கண்டித்த அவர், ஆதர்ஷை வகுப்பறையை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆதர்ஷ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை மாணவி லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்தார். பிறகு அவர் லட்சுமியை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் இருவரின் உடலிலும் தீ பரவியதால் அவர்கள் அலறினர். தங்கள் கண் முன் நடந்த இந்தக் கொடூரச் செயலைப் பார்த்த மாணவ- மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவர்களைக் காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே இருவரும் கருகி பிணமாகச் சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories