December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

கார்த்திகை சோமவாரம்… பக்தர்கள் விளக்கேற்றி வர… ஊழியர் அணைத்து வர… கொடூரம்!

vilakku1 ap - 2025

கார்த்திகை சோமவாரத்தில் பக்தர்கள் ஏற்றிய தீபங்களை அணைத்த ஆலய ஊழியர் . ஒய்சிபி எம்எல்ஏ ஆத்திரம். ஊழியரின் வேலைக்கு வைத்தார் வேட்டு.

கோவிலில் பக்தர்கள் ஏற்றிய கார்த்திகை தீபங்களை அணைத்தார் ஆலய ஊழியர். பக்தர்கள் தடுத்தும் கேட்காமல் நீர் ஊற்றி அணைத்த கொடுமை. சோசியல் மீடியாவில் வைரலான வீடியோவால் மாட்டிக் கொண்டார்.

சம்பவம் குறித்து ரொம்பவே சீரியஸாக எதிர்வினை ஆற்றிய கோவூரு எம்எல்ஏ ‘நல்லபுரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி’ கோவில் ஊழியரை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

jonnavada kamatchi amman temple - 2025

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புண்ணியத்தலம் ‘ஜொன்னவாடா’ காமாட்சி அம்மன் கோவில்! இங்கே நடந்த இந்தச் சம்பவம் பற்றி கோவூரு எம்எல்ஏ ஆத்திரமடைந்தார். ஆலய செயல் அதிகாரி என்ன செய்கிறார் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கார்த்திகை மாதம் பக்தர்கள் பெருமளவில் கோவிலுக்கு வந்து விளக்கு ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு வருத்தமளிக்கிறது என்றார்.

ஊழியர் மது அருந்தி விட்டு பைப்பை போட்டு குழாயிலிருந்து நீர் பாய்ச்சி பக்தர்கள் ஏற்றிய விளக்குகளை அணைக்கும்போது அதிகாரிகள் கண்காணிக்காமல் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுமக்கள் எதிரில் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இது சின்ன விஷயம் அல்ல. மக்களின் பக்தி, நம்பிக்கை தொடர்பானது என்று கூறினார்.

இதுகுறித்து மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளோடு எம்எல்ஏ உரையாடினார். ஜொன்னவாடா ஆலயத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

நெல்லூர் மாவட்டம் ‘புச்சிநாயுடு கண்ட்ரங்கி’ மண்டலம் ஜொன்னவாடாவில் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து தரிசித்துச் செல்வது வழக்கம் . அதிலும் கார்த்திகை மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தன்று இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது. ஆலய ஊழியரின் இந்த செயலை பக்தர்கள் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்ததால் அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories