உடலில் பற்றி எறிந்த தீயுடன் பைக்கில் வந்த இளைஞரால் பரபரப்பு.!

fire youth - 2026

உடலில் பரவிய தீயுடன் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொட்டியபுரம் காலனி பகுதியில் வசித்து வருபவா் குப்புசாமி இவரது மகன் விக்னேஷ் வயது 24.

நேற்று காலை விக்னேஷ் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய உடல் முழுவதிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.

மேலும் உடலில் தீ பரவிக்கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதால் உடல் முழுவதும் தீ பரவி கருக தொடங்கியது.

பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.

விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விக்னேஷ் மீட்டெடுத்து சேலம் அரசு மருத்துவமனையின் அனுமதித்தனர்.

உடலில் 90% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

ஆதலால் விக்னேஷ் தீக்குளித்த பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

மேலும் விக்னேஷிடம் காவல்துறையினர் இறுதி வாக்குமூலத்தை பெற்று கொண்டனா்.

அதில் நான் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, அவர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதால் பண்ணப்பட்டியிலுள்ள கிளினிக்குக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories