டிச-5: இன்று உலக மண் வள தினம்!

Published:

environmentday1 - 2026

நிலத்தடி மண்ணின் ஆரோக்கியமே உலகின் உணவு பாதுகாப்புக்கு அடித்தளம். பூமியின் சாரத்தை பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நாள் நினைவு படுத்துகிறது.

இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் பூமித்தாய் வளம் பெறுகிறாள். நிலத்தின் மண்வளத்தை ஆராய்ந்து அதற்கேற்ப எரு பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் முக்கியத்துவம்.

environmentday3 - 2026

அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் பூமியில் உள்ள மண்ணே ஆதாரம். ஒரு காலத்தில் பயிர்கள் இயற்கை உரம் போட்டு வளர்க்கப்பட்டன. தற்போது ரசாயன எரு உபயோகம் அதிகமாகிவிட்டதால் பூமியின் சாரம் குறைந்து வருகிறது.

பூச்சி மருந்துகளும் ரசாயன உரங்களும் கணக்கின்றி பயன்படுத்தப்படுவதால் மண் வளமும் மனித ஆரோக்கியமும் ஒருசேர கெடுகின்றன.

environmentday2 - 2026

அனைத்து உயிர்களுக்கும் காற்று நீர் உணவு மூன்றும் ஜீவாதாரமானவை. நிலவளம் நன்றாக இருந்தால்தான் கைப்பிடி அளவு கவளமாவது மனிதனுக்கு பசியாறக் கிடைக்கும்.

நம்நாடு விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டது. அதனால் இந்த நாள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
environmentday4 - 2026

அதோடு ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவு மண் அரித்துச் செல்லப்படுகிறது. பூமியின் மீது மக்கள் தொகை பெருகுமளவு விவசாய நிலத்தில் மண் அரிப்பும் பாதிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் “மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!” என்பது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img