பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டம்: குஜராத் சட்டசபையில் நிறைவேற்றம்

Published:

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொடுங் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

  • குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின்படி, சந்தேகத்துக்குரிய நபர்களின் டெலிபோன் மற்றும் செல்போன் பேச்சுகளை மாநில அரசு அதிகாரிகள் இடைமறித்து ஒட்டுக் கேட்கலாம்.
  • கொடுங்குற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் போலீசார் விசாரிக்கும் காலத்தை நீட்டிக்கலாம்.

  • போலீஸ் உயரதிகாரிகளிடம் பிடிபடும் நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை கோர்ட் வழக்குகளில் சாட்சியங்களாக பயன்படுத்தலாம் .

முன்னதாக, கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இந்த சட்ட முன்வரைவு அந்நாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோரிடம் அனுப்பி வைக்கப்பட்ட வேளைகளில் அவர்கள் இருவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தனர். இந்நிலையில், குஜராத்தை மையமாக வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதால் இந்த சட்டம் மிகவும் அவசியமாகும் என கருதிய ஆனந்தி பென் தலைமையிலான குஜராத் மாநில அரசு இன்று இந்தப் புதிய சட்டத்தை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இதனை அரசியல் ஆதாயத்துக்காகவே இதை அரசு சட்டமாக நிறைவேற்றியுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img