ஏப்ரல் 1 – கேஜரிவால் தினம்: தில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Published:

kejriwal-divas புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் எப்போதும் ஊடகங்களிலும் மக்களிடமும் இருந்து கொண்டே யிருக்கிறார்கள் – அதுவும் எதிர்மறை விஷயங்களாக என்பது இன்று தில்லியில் வெளிப்பட்டது. ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினம் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் தில்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ஏப்ரல் 1 – கேஜரிவால் தினம் என்று கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறியபடி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎஸ்கேஎஸ் எனப்படும் பகத் சிங் கிராந்தி சேனா என்ற வலதுசாரி சிந்தனை கொண்ட தேசியவாத அமைப்பினர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளர். அதில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று கேஜரிவால் தில்லி மக்களுக்கு ‘கேஜரிவால் தினம் என வாழ்த்து தெரிவிப்பதாக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவை செவ்வாய்கிழமை இரவு ஒட்டப்பட்டன. ராஜ்கட்டில் கேஜ்ரிவால் அமர்ந்திருக்கும் படம் இடம்பெற்றிருந்தது. மேலும் சமூக வலைதளங்களில் இந்தப் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img