December 6, 2025, 2:41 AM
26 C
Chennai

இந்தியாவின் பாமாயில் புறக்கணிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க… நாங்கள் பெரிய நாடு இல்லை: மலேசிய பிரதமர்!

malaysia mahadir pm modi - 2025

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை புறக்கணிக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு மலேசியா பெரிய நாடு இல்லை என அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகம்மது (94) தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலத்தை 2ஆக பிரித்தது ஆகியவற்றை மகாதீர் முகம்மது விமர்சித்திருந்தார். மேலும் சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

மகாதீர் இவ்வாறு சர்வதேச அளவில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும்படி இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டும், அதனை மகாதீர் முகமது கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே கருத்தை தெரிவித்து வந்தார். மேலும், இந்தியாவால் தேடப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதி ஜாஹிர் நாயக்குக்கு மலேசிய நிரந்தரக் குடியுரிமை தருவதிலும் பிடிவாதமாக உள்ளது மலேசியா.

இதனால் வருத்தத்தை வெளியிட்ட இந்திய அரசு, மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியது.

எண்ணெய் வாங்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா மிகப் பெரும் சந்தையைக் கொண்டிருக்கிறது. அதுபோல், மலேசியா உலக அளவில் இரண்டாவது மிகப் பெரும் எண்ணேய் உற்பத்தியாளராக உள்ளது.

இதனால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்தது. கடந்த வாரம் திடீரென 10சதவீதத்துக்கும் மேல் சரிவு கண்டு, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்ததால் மலேசியாவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மகாதீர் முகம்மதுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மகாதீர் முகமது, இந்தியாவின் நடவடிக்கை சரியானதல்ல. சிறிய நாடான எங்களால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க இயலாது. இந்த பிரச்சனையை தீர்க்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories