December 7, 2025, 4:33 AM
24.5 C
Chennai

காதலர்களுக்கு உதவும் தோழியா நீங்கள்? உஷாராய் இருங்கள்!

love - 2025

தங்கள் காதலை நிறைவேற்றிக் கொள்ள காதலனும், காதலியும் சேர்ந்து நட்பாக பழகிய இளம்பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம், நொய்டாவில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கபில், ரூபி ஷர்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு ரூபி வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்துள்ளது.
இந்நிலையில் எப்படியாவது ஒன்றாக வாழ வேண்டும் என திட்டம் போட்ட இந்த காதல் ஜோடி அதற்கு அப்பாவி பெண் ஒருவரை பலியாக்கியுள்ளனர்.

fire bath 1 - 2025

கபில் பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் பூனம் என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இவர், இந்த காதல் ஜோடிகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்தவர். இவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்ததும் இவருக்குத் தெரியும்.

காதலர்களிடம் நட்பாகவே பழகி, தன்னுடைய ஆதரவையும் தெரிவித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூனம் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

love - 2025

இதனை அடுத்து நடந்த விசாரணையில் கபில், ரூபி ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில், தங்களது காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், பூனத்தை தனியே அழைத்து சென்று அவரை கொலை செய்து எரித்து விட்டதாகவும், ரூபி தான் இறந்து விட்டார் என்று அவரது வீட்டினரை நம்ப வைப்பதற்காக, பூனத்தை எரித்த இடத்தில் ரூபியின் பொருட்களை போட்டு விட்டு சென்றதாகவும் கபில் வாக்குமூலம் அளித்தார்.

ரூபி இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் நாங்கள் இருவரும் வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

punam - 2025

தங்கள் காதலை நிறைவேற்றுக் கொள்வதற்காக, அன்பும் நட்பும் இவர்கள் காதலுக்கு ஆதரவாகவும் இருந்த தோழியை, அறியாத அப்பாவி பெண்ணை, சுயநலக் காதலர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories