பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசிக்கு பதிலாக புதிய அமைப்பு: மத்தியக் குழு பரிந்துரை

UGC புது தில்லி: நாட்டின் உயர்கல்வி விவகாரங்களில் பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசியின் செயல்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக அதைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. இது, கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசியை மறுசீரமைக்கும் நோக்கில் அதன் முன்னாள் தலைவர் டாக்டர் ஹரி கௌதம் தலைமையில் ஒரு குழுவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஹரி கௌதம் அளித்த அறிக்கையில், [su_quote]யுஜிசியை மறுசீரமைக்கும் நடவடிக்கை வீண் முயற்சி. தற்போது இது தாற்காலிக அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. யுஜிசியில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபாடு இன்றி செயல்படுகின்றனர். அதன் செயல்திறன் கீழ்நோக்கிச் செல்கிறது. யுஜிசியின் மண்டல அலுவலகங்கள், கல்வி தொடர்பான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடும் தோல்வியடைந்துள்ளது. இவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகையும், மனித வள ஆற்றலும் வீணாகின்றன. மாநில அளவில் உள்ள அமைப்புகளை நேரில் ஆய்வு செய்வதிலும் யுஜிசியின் தலைமை ஆர்வம் காட்டுவதில்லை[/su_quote] என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமது பரிந்துரையில் ஆராய்ச்சி மாணவர்களைத் தேர்வு செய்ய தேசிய அளவில் ஆராய்ச்சி திறனறிவுத் தேர்வு நடத்துவது, யுஜிசி அமைப்புக்குப் பதிலாக நாடாளுமன்ற சட்டத்தின்படி “தேசிய உயர்கல்வி ஆணையம்’ அமைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய செய்தி வெளியானதும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இச் செய்தியை மறுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories