ரஜினியிடம் என்ன இருக்கிறது? அவர் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? : கட்ஜு

katju - 2026

ரஜினியிடம் என்ன இருக்கிறது; அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் விரும்புகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்க, மார்கண்டேய கட்ஜுவோ, தனது பேஸ்புக் பக்கத்தில், வேறுவிதமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் ஒன்றும் இல்லை கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூலில் பதிவு செய்த கருத்துகள்:

தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான குருட்டு பக்தியை மக்கள் வைத்திருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

1967-68களில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருமுறை எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து ‘சிவாஜி கணேசன்’ நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூட சிலர் கூறுகின்றனர். அப்படி ரஜினியிடம் என்னதான் இருக்கிறது?

வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஏதேனும் தீர்வுகள் வைத்துள்ளாரா? அவரிடம் ஒன்றுமே இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.” என்று கட்ஜு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவரது முதல் நாள் பேச்சைக் கொண்டே, அவர் அரசியல் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, தினமும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories