ரஜினியிடம் என்ன இருக்கிறது? அவர் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? : கட்ஜு

Published:

katju - 2026

ரஜினியிடம் என்ன இருக்கிறது; அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் விரும்புகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்க, மார்கண்டேய கட்ஜுவோ, தனது பேஸ்புக் பக்கத்தில், வேறுவிதமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் ஒன்றும் இல்லை கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூலில் பதிவு செய்த கருத்துகள்:

தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான குருட்டு பக்தியை மக்கள் வைத்திருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

1967-68களில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருமுறை எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து ‘சிவாஜி கணேசன்’ நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூட சிலர் கூறுகின்றனர். அப்படி ரஜினியிடம் என்னதான் இருக்கிறது?

வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஏதேனும் தீர்வுகள் வைத்துள்ளாரா? அவரிடம் ஒன்றுமே இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.” என்று கட்ஜு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவரது முதல் நாள் பேச்சைக் கொண்டே, அவர் அரசியல் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, தினமும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img