டிக்கெட் வாங்குன்னு சொன்னதுக்கு… பெண் கண்டக்டரின் ட்ரெஸ்ஸைக் கிழித்து…. சித்தூரில் கொடூரம்!

Published:

rtc conductor - 2026

டிக்கெட் வாங்கச் சொல்லி கேட்டதால் ஆண் பயணி, பெண் கண்டக்டருடைய உடையை கிழித்து…. சக பயணிகள் தடுத்தாலும் விடாமல் தாக்கிய பயணி.

குற்றவாளியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சகபயணிகள். சித்தூர் மாவட்டத்தில் இந்த கொடுமை நிகழ்ந்தது.

மதனப்பல்லி அருகில் ஆர்டிசி பஸ்ஸில் பெண் கண்டெக்டர் மீது நடந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனப்பல்லி டிப்போவைச் சேர்ந்த பஸ், குர்ரம் கொண்ட, தரி கொண்டல என்ற இடங்களின் நடுவில் பயணித்துக் கொண்டிருந்தபோது செவ்வாயன்று பஸ்சில் பெண் கண்டக்டர் பணிபுரிந்து வந்தார்.

பஸ்சில் பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த போது சிவா ரெட்டி என்பவர் மட்டும் டிக்கெட் வாங்கிக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காததால் கண்டக்டர் அவரிடம் ஏன் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். டிக்கெட் வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதனால் கோபத்தால் பொங்கி எழுந்த சிவாரெட்டி அவரைத் தாக்கத் தொடங்கினார். அதோடு நிறுத்தாமல் அவர் உடையைப்பற்றி கிழித்தார். பயணியின் தாக்குதலை கவனித்த சகபயணிகள் சிவா ரெட்டியை தடுக்க முயற்சித்தாலும் அவர் பின்வாங்காமல் பெண்ணென்றும் பாராமல் அவர் மீது கை வைத்தார். இறுதியில் பிற பயணிகள் அனைவரும் சேர்ந்து சிவாரெட்டியைப் பிடித்து அடித்து நொறுக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பெண் கண்டக்டர் வால்மீகிபுரம் போலீசாருக்கு புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அவருக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றார்.

கண்டெக்டர் மீது தாக்குதல் நடத்தியதால் ஆர்டிசி தொழிலாளர் சங்கங்கள் ஆத்திரமடைந்தனர். தாக்குதல் நடத்திய குற்றவாளி மீது கடின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img