
நா நயத்தின் நாணயம்!
இன்று உலகின் சக்தி வாய்ந்த கரன்சி என்றால் அது டாலர் என்பதாக புரிந்து வைத்திருக்கிறோம். காரணம் அதன் நிகர மதிப்பில் தங்கம் இருப்பதாக பலருக்கும் ஒரு நினைப்பு. ஆனால் அது தவறு.
இதனை ஆனானப்பட்ட அமெரிக்காவே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள், 1971 ஆம் ஆண்டில்.
அப்போதைய அதிபராக ரிச்சர்டு நிக்சன் டாலருக்கு நிகரான தங்கம் என்பது இனி கிடையாது எனவும் ஏற்கனவே 44 நாடுகள் ஒன்று சேர்ந்து 1941 ஆம் ஆண்டில் பிரேட்டன் உட்ஸ் (bretton woods) என ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வருவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
உலக வரலாற்றில் இது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். இது புரிந்தால் தான் இன்றுள்ள உலக பொருளாதார மூலதனச் சந்தையை புரிந்து கொள்ள முடியும்.இன்று உள்ள நிலையில் இது அத்தியாவசிய அவசியம் கூட.
சரி…..அது என்ன பிரேட்டன் உட்ஸ் ஒப்பந்தம்…?!?!?!
முதல் உலக போர் காலக்கட்டத்தில் அமெரிக்கா இப்போரில் பங்கேற்கவில்லை…. ஆனால் ஆயுத தளவாட வழங்கலில் ஈடுபட்டது.1925ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் பொருளாதார மந்தநிலை நோக்கி சரிந்த சமயத்தில்…. அது வரையில் உலக அளவிலான வணிக சந்தையில் பிரிட்டனின் ஸ்டெர்லிங் என்கிற கரன்சி தான் கோலோச்சியது
இது தங்கத்தை கட்டுப்படுத்த….. தங்கத்தின் மதிப்பை அனு தினமும் லண்டனில் மதிப்பீடு செய்ய ஆரம்பித்தனர்.
இது இன்றளவும் தொடர்கிறது என்பது தனிக் கதை.
ஆனால் அன்று…. உலக நாடுகளில் தங்கள் வசம்… அல்லது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தங்கத்தை பிரிட்டனை தாண்டி பொதுவான தேசத்தின் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்க அவர்கள் தேர்ந்தெடுத்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் கனடாவாக இருந்தது.
ஏன் இப்படி…????
அமெரிக்காவில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும் பிரிட்டனில் இருந்து குடியேறியவர்கள் அதிகம். கனடா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த தேசம்.
ஆக இந்த இரண்டு இடங்களில் தங்கள் நாட்டின் தங்கத்தை பாதுகாத்து வைத்து அதன் நிகர மதிப்பிலான கரன்சியை உலக சந்தையில் புழக்கத்தில் விட…. இதில் ஏதேனும் ஒரு நாட்டில் அவர்களின் கரன்சிக்கு பாதிப்பு என்றாலும் நேரிடையாக மேற்சொன்ன நாடுகளில் இருந்து கைவசம் உள்ள கரன்சியை மாற்றம் செய்து அதற்கீடான தங்கத்தை பெற்று கொண்டு விட முடியும் என்கிற நிலை இருந்தது.
போர், ஆசிய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற தருணம் அது. யார் ஜெயித்தார்கள்… தோற்றார்கள்… என்பது மாறி மாறி வந்த காரணத்தால் மேற்சொன்ன ஏற்பாடு. இந்த ஏற்பாட்டால் உலக வணிக சந்தையில் ஒரு பிடிமானம் வந்தது.
இது 1944ஆம் ஆண்டில் ஐரோப்பா திவால் நிலையில் இருந்த காலத்தில் 44 நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் பிரேட்டின் உட்ஸ் என்கிற இடத்தில் ஒன்று கூடி… ஒரு ஹவுன்ஸ் தங்கத்திற்கான விலை 35 அமெரிக்க டாலர்கள் என்பதாக நிகர மதிப்பில் மதிப்பீடு செய்து நிலைநிறுத்தி வைத்து கொண்டார்கள்.
நன்கு கவனியுங்கள்…. இங்கு ஹவுன்ஸ் என்பதே பிரிட்டிஷ் அளவீட்டு முறை தான். அதுபோலவே ஐரோப்பா திவால் நிலையில் இருந்த காரணத்தால்…. அதாவது பெரும்பாலான தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவில் குவிந்திருந்த காரணத்தால் அங்கு வைத்து பேசி முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதனோடு சேர்த்து உலக அளவில் புழக்கத்தில் இருந்த கரன்சியை… அதாவது அந்தந்த தேசங்களில் புழங்கிய கரன்சியை… தங்கத்தின் மதிப்பில் மாற்றி அதனை நேரிடையாக அமெரிக்க டாலருக்கு நிகர மதிப்பில் மாற்றீடு செய்து கொண்டனர்.
இப்படி செய்த சமயத்தில் பிரிட்டனில் ஸ்டெர்லிங் அமெரிக்க டாலர்களை விட அதிக மதிப்பில் இருந்தது…. தவிர தங்கத்தின் அளவீடும் அவர்களுடைய ஹவுன்ஸ் முறையில் இருந்ததால் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். ஆதனால் மற்றவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இதன் தாக்கம் பூதாகரமாக வளர்ச்சி கண்டது அமெரிக்க டாலர். இந்த டாலர் என்கிற கரன்சிக்கு உண்டான சொல்லில் பல நாடுகளில் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது…. உதாரணத்திற்கு சிங்கப்பூர் டாலர்., ஆஸ்திரேலியா டாலர் கேமன் தீவுகள் டாலர் என பலதரப்பட்ட டாலர்கள் புழக்கத்தில் வருகிறது….. வெவ்வேறான மதிப்பில்.
இப்படி பட்ட பிரேட்டின் உட்ஸ் ஒப்பந்தத்தில் இருந்து தான் நிக்சன் வெளியே வந்ததாக அறிவித்தார்.
அப்படி என்றால். தங்கத்தின் நிகர மதிப்பில் அமெரிக்க டாலர்கள் இல்லை என்றால்…. உலக அளவிலான கரன்சி யாக அமெரிக்கா டாலர் வழக்கொழிந்து போய் இருக்க வேண்டுமே என்றால்….. அது தான் நடக்கவில்லை.காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் அபரிதமாக கிடைத்த கச்சா எண்ணெய்…… அதனாலேயே அதற்கு கருப்பு தங்கம் என்று பெயர் கிடைத்தது.
கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு அமெரிக்கா டாலர்கள் மதிப்பீடு செய்யும் முறையை ஏற்படுத்தி….. அதாவது கட்டாயப் படுத்தி… அமெரிக்கா ஆட்டம் காட்ட… சவூதி அரேபியா உடனடியாக அமெரிக்கா பக்கம் நின்றது. உடனடியாக அமெரிக்க ராணுவம் அவருக்கு வேண்டியதை செய்வதாக வாக்குறுதி கொடுத்தது.காபந்து செய்தது. மிக மிக முக்கியமான நுணுக்கமான நகர்வு இது.
அமெரிக்கா, ஏக வல்லரசு நோக்கி பீடு நடை போட்டு நகர்ந்தது. மத்திய கிழக்கில் அதுவரையில் கோலோச்சி வந்த ஈரானிய பெர்சிய மன்னர் ஆட்சி காணாமல் ஆக்கப்பட்டது. உலகின் மிக நீண்ட கால குடியிருப்பை கொண்டு ஈராக் சின்னாபின்னமாக்கபட்டது.
இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்தது என ஏகப்பட்ட அழிச்சாட்டியங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது… வெற்றியும் கண்டது அமெரிக்க ராஜாங்கம். எல்லாம் சில காலம் என்பது போல், அமெரிக்க அழிச்சாட்டியங்களால் உண்டாக்கப்பட்ட ஒரு துணுக்கு…. ஒசாமா பின் லேடன் அதே அமெரிக்காவின் சரிவுக்கும் பிரதான காரணம் ஆனார் பின்னாட்களில்!
அவையெல்லாம் வேறு சமாச்சாரங்கள். இன்றைய தேதியில் டாலர் மிகப்பெரிய சரிவை சந்திக்க இருக்கிறது. அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உலக நாடுகளின் தலையில் விடிந்திருக்கிறது.
உதாரணத்திற்கு நம் இந்திய கரன்சிக்கு நிகரான அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூபாய் 87 அல்ல, வெறும் 23ரூபாய்.50 பைசா மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க டாலர்களின் மதிப்பு சரிந்துக் கொண்டே இருப்பதால் அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்து வருகிறதே தவிர நிஜத்தில் நம் இந்திய ரூபாய் அதன் மதிப்பை இழக்கவில்லை. வளர்ச்சி கண்டு வருகிறது.
இதை நேர் செய்ய எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இன்றளவும் முன்வரவில்லை…. மாறாக தற்போது உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து உலக வணிகம் அமெரிக்க டாலர்களில் இருக்க வேண்டும் என பம்மாத்து பண்ணிக் கொண்டு நிற்கிறார். தவறினால் பொருளாதார தடை என புருடா விட்டு கொண்டு இருக்கிறார்.
பத்து சதவீத வரி விதிப்பை செய்திருக்கிறார் அமெரிக்க இறக்குமதிகளின் மீது. இது அமெரிக்க மக்கள் தலையில் விடிந்திருக்கிறது. அது பற்றி கவலை ஏதும் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை… கஜானாவுக்கு கரன்சி வந்தால் சரி என்கிற நோக்கில் செய்யப்பட ஆரம்பித்து விட்டார்.
அடுத்ததாக பிக் ப்யூட்டிபுல் பில் பாஸ் செய்து விட்டார், அது அடுத்த ஆண்டில் இருந்து அமலுக்கு வந்துவிடும். இவற்றுக்கெல்லாம் நம்மவர்களின் எதிர்வினை? மிகப் பெரிய பாய்ச்சலுக்கு தயாரான புலி போல் நம்மவர் செயல்பட்டு வருகிறார்.
ரியோடி ஜெனிரோ வில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்லும் வழியில் ஐந்து நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்ததும் இதன் பொருட்டே. இந்த மாநாட்டில் சீனா…. அதாவது பிரிக்ஸ் BRICS வரும் C சீனா கலந்து கொள்ள வில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
ஏன்?
அமெரிக்க கரன்சி டாலரை தாங்கிப் பிடிக்கும் கட்டாயத்தில் அது இருக்கிறது. உலக நாடுகளில் உள்ள அமெரிக்க டாலர்களின் கையிருப்பு அமெரிக்கா தவிர்த்து சீனாவிடம் தான் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இது அத்தனையும் தங்கமாக மாற்றீடு செய்து கொள்ளலாம் என பார்த்தால் செயற்கையாக தங்கத்தின் விலை ஏகத்திற்கும் உயர்த்து நிற்கிறது. கைவசம் உள்ள அமெரிக்க டாலர்கள் வேறு மதிப்பும் சரிவை சந்தித்து வருகிறது. இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறது பெய்ஜிங்.
அதனால் தற்போது உள்ள நிலையில் அமெரிக்க டாலர்களை விட அதனால் முடியவில்லை. நம்மவர்களோ மிக சாதூர்யமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
உலகின் கரன்சியாக தங்கத்தை பிரிட்டனின் ஸ்டெர்லிங்க்கு மாற்றி இங்கிலாந்து கோலோச்சியதோ.. அதனை எப்படி அமெரிக்க அப்படியே டாலருக்கு கொண்டு சென்றதோ.அதுபோலான விஷயத்தை கையில் எடுத்து இயங்கி வருகிறார்கள்.
1944 ஒப்பந்தத்தின் படி அமெரிக்க மக்களிடம் இருந்த தங்கத்தை எல்லாம் விலை கொடுத்து வாங்கி தனது அரசாங்க கஜானாவில் இருப்பு வைத்து அமெரிக்க டாலரை உலக கரன்சி யாக மாற்றீடு செய்தது. அதை.. மிக மிக நுட்பமாக…, கச்சா எண்ணெயோடு மாற்றீடு செய்து கொண்டது. இன்று அது அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
நம்மவர்களோ இந்த இடத்தில் மிகவும் நுணுக்கமான விஷயங்களை திட்டமிட்டு துல்லியமாக காய் நகர்த்தி வருகிறார்கள். அது தான் டிஜிட்டல் கரன்சி. இதற்கு தான் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் ப்ளஸ் மாநாடு எல்லாம்! அது எப்படி வேலை செய்யும்?
ஏற்கனவே அமெரிக்காவுக்கு எதிரான திட்டமிடலின் ஓர் பகுதியாக ரஷ்யா மற்றும் வட கொரியா தளமாக கொண்டு இயங்கும்…. இயங்கிய… பிட்காயின் தான் இதன் ஆதாரசுருதி. அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி தான் நம் இந்திய UPI பரிவர்த்தனை முன்னெடுப்புகள். இன்று அது அசூர வளர்ச்சி பெற்று மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
இன்றைய தேதியில் உலக அளவில் 800 பில்லியன் டாலர்கள் அளவிற்கான பரிவர்த்தனை செய்து அசாத்தியமான பரிணாம வளர்ச்சி கண்டு இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கூட BHIM UPI அட்டகாசமாக செயல்பாட்டில் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..
சரி…. இதற்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம்? விஷயம் இருக்கிறது. அமெரிக்க டாலர்களின் மதிப்பு புழக்கத்தில் இருந்தே சரிய தொடங்கி விட்டால்…… அதற்கீடாக டிஜிட்டல் கரன்சி செயல்பாட்டில் கொண்டு வந்து விட்டால்…. பொருளாதார குற்றங்களும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முடியும் என்கிறார்கள்.
டாலரை டிஜிட்டலைஸ் செய்கிறார்கள். அதாவது அமெரிக்க டாலர்களை கணக்கில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இது நடந்தால் டாலர் மண்ணை கவ்வும். ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டு கணக்கு வழக்கு இல்லாமல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இனி அதன் பச்சா பலிக்காது போகலாம் என்கிறார்கள் உலக பொருளாதார வல்லுனர்கள்.
ஆனானப்பட்ட அமெரிக்கா, கடைத் தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்து ஊரை ஏமாற்றிய விஷயம் எல்லாம் இனி ஒவ்வொன்றாக ஊரறிய தெரிய வரும் போலிருக்கிறது.
அதற்கு அச்சாரம் தான் நம்மவர் செயல்பாடு. செயற்கரிய செயல்களில் இதுவும் ஒன்றாக நாளைய சரித்திரம் பேசும். ஊர் ஊராகச் சென்று பட்டங்களையும் பதக்கங்களைரும் வேண்டி விரும்பி பெற்று வரவில்லை…. மாறாக அந்தந்த தேசங்களில் உள்ள பட்டங்களுக்கு இவரால் மதிப்பு உண்டாக்கி கொடுத்து வருகிறார். இவையெல்லாம் போகப் போக நாளைய உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்படும்… நம் கண் முன்னே நடக்கும் நிதர்சனமான நிஜங்கள். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்





