8 சத அகவிலைப்படி உயர்வு: போலி சுற்றறிக்கை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

min-of-finance சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சக செலவு கணக்கு துறை சார்பு செயலாளர் பட்டாச்சார்யா பெயரில் 30–ந்தேதி ஒரு சுற்றறிக்கை வெளியானது. அதில் இந்த அகவிலைப் படி உயர்வு 1–1–2015 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்ததை விட கூடுதலாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதே என தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் வியப்பும் அடைந்த நிலையில் அந்த சுற்றறிக்கை போலியானது என்று தெரிய வந்துள்ளது. அது போன்ற சுற்றறிக்கை செலவுக் கணக்குத் துறையால் அனுப்பப்படவில்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செலவு கணக்கு துறை இயக்குனர் சுபாஷ்சந்த், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளுக்கு 1–ந்தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மார்ச் 30–ந்தேதியிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை போலியானது. அதன் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 107 சதவீத அக விலைப்படி உயர்வு பெறுகின்றனர். 1.1.2015 முதல் மேலும் 6 சதவீத டி.ஏ. வழங்கப்பட வேண்டும். வழக்கமாக ஜனவரி 1–ந்தேதி முதல் வழங்க வேண்டிய கூடுதல் டி.ஏ. ஏப்ரல் முதல் வாரத்தில் கிடைக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த நிலையில், 30–ந்தேதி இந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியானது. 6 சதவீதம் மட்டுமே டி.ஏ. உயர்வு வர வேண்டிய நேரத்தில் 8 சதவீத உயர்வு என அதில் கூறப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசின் பெயரில் போலி சுற்றறிக்கை அனுப்பி விஷம பரீட்சையில் யாரோ ஈடுப்பட்டுள்ளனர். இது அரசு நிர்வாகத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததை காட்டுகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு உடனே களையப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்களே கூறுகின்றனர். இவ்வாறு போலி சுற்றறிக்கை மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories