கென்ய பல்கலையில் தாக்குதல்: சோனியா கண்டனம்

Published:

புது தில்லி: கென்ய பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 147 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. கல்வி பயிலும் இடத்தில், அப்பாவி மாணவ, மாணவியர் மீது மனிதாபிமானமற்ற அமைப்பு இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளது. இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று சோனியா தெரிவித்துள்ளார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img