எல்லை தாண்டி மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை: சிறீசேன

Published:

கொழும்பு: இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் சிறை பிடிக்கும்படி கடற்படையினருக்கு சிறீசேன உத்தரவிட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, ஆண்டு ஒன்றுக்கு 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர். இந்நிலையில், இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img