செல்போன் திருடிய இளைஞரின் கை எரிப்பு: விரல்களை பாதுகாக்க மருத்துவர்கள் முயற்சி

Published:

சென்னை: .தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த, வேலவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் எனபவரின் மகன் பவுன்ராஜ் 18. மூளை வளர்ச்சி குன்றியவர். இவர் செல்போன் ஒன்றைத் திருட முயன்றதாகக் கூறி அவரை மரத்தில் கட்டி வைத்து, அடித்து, அவரது கையை 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்ததாம். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவுன்ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகன் பவுன்ராஜ் மூளை வளர்ச்சி குன்றியவர் என்றார் அவரது தந்தை. பவுன்ராஜின் தீக்காயத்தை ஆற்றுவதற்காக தொடர் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட ஆள்காட்டி விரலை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்துள்ளனர். மேலும் விரல்கள் பாதிக்கப்படா வண்ணம் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காய சிகிச்சைப் பிரிவு தலைவர் நிர்மலா பொன்னம்பலம் கூறுகையில், ”பவுன்ராஜ் காய்ச்சல் குறைந்து, குணமாகி வருகிறார். கையில் தீப்புண்ணும் ஆறி வருகிறது. ரத்த ஓட்டம் இல்லாததால், விரல்கள் செயலிழந்து உள்ளன. தொற்று பாதிப்பால் ஆள் காட்டி விரலை அகற்றி உள்ளோம், மற்ற விரல்களை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img