புது தில்லி: இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இதுவரை வந்த பிரதமர்களிலேயே மோடிதான் சிறந்தவர் என்று பெருவாரியானவர்களும் கூறியுள்ளனர். அடல் பிஹாரி வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோரைக் காட்டிலும் மோடி சிறந்தவர் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, 12 ஆயிரம் பேரிடம் பிரதமர் மோடி தலைமை குறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜக., ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் – 300 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி உள்ளது, அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து அந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அந்த முடிவுகளை அது இன்று வெளியிட்டது. அந்தக் கருத்துக் கணிப்பின் படி, 38 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு நன்றாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 22 சதம் பேர் மிக நன்றாக இருந்ததாகவும், 11 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப் பட்டால், தற்போதுள்ள சீட்களைக் காட்டிலும், பாஜக 27 சீட்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பின்போது, மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்து இருந்ததாகவும், அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர் என்றும், இது தற்போது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், மோடியின் ஆட்சி மோசம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேரும் தற்போது 11 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. கடந்த 6 மாதத்தில் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 1 சதவீதம் குறைவாகவும், மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அது தெரிவிக்கிறது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Entertainment News
Previous article

