புது தில்லி: இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இதுவரை வந்த பிரதமர்களிலேயே மோடிதான் சிறந்தவர் என்று பெருவாரியானவர்களும் கூறியுள்ளனர். அடல் பிஹாரி வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோரைக் காட்டிலும் மோடி சிறந்தவர் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, 12 ஆயிரம் பேரிடம் பிரதமர் மோடி தலைமை குறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜக., ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் – 300 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி உள்ளது, அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து அந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அந்த முடிவுகளை அது இன்று வெளியிட்டது. அந்தக் கருத்துக் கணிப்பின் படி, 38 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு நன்றாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 22 சதம் பேர் மிக நன்றாக இருந்ததாகவும், 11 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப் பட்டால், தற்போதுள்ள சீட்களைக் காட்டிலும், பாஜக 27 சீட்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பின்போது, மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்து இருந்ததாகவும், அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர் என்றும், இது தற்போது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், மோடியின் ஆட்சி மோசம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேரும் தற்போது 11 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. கடந்த 6 மாதத்தில் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 1 சதவீதம் குறைவாகவும், மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அது தெரிவிக்கிறது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.
சினி நியூஸ்
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
உரத்த சிந்தனை
சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
நூலரங்கம்
‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு
சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.
சினி நியூஸ்
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
உரத்த சிந்தனை
சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
நூலரங்கம்
‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு
சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்
நிகழ்ச்சிகள்
இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
வணிகம்
போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!
மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.
Entertainment News
Previous article

